திருப்பூர் : கோழி பிடிக்கச் சென்று கிணற்றில் தவறி விழுந்த 10-ம் வகுப்பு மாணவியை தீயணைப்பு துறையினர் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து ராயம்பாளையம் கிராமத்தில் புலிக்காடு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் முருகேஷ். சொந்தமாக வேன் ஓட்டிவரும் இவரது மூத்தமகள் பவதாரிணி (வயது 16) என்பவர் அவிநாசி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை தங்களது வீட்டின் அருகே இருந்த விவசாய கிணறு ஓரமாக கோழி பிடிக்கச் சென்ற போது கிணற்றை சுற்றி படர்ந்திருத்த கொடியில் கால் சிக்கி தடுமாறி தவறி கிணற்றில் விழுந்துள்ளார்.
இதைக் கண்ட சிறுமியின் தாத்தா மாரய்யன் மற்றும் அருகில் கட்டிட வேலைக்கு வந்திருந்த மேஸ்திரி சிவக்குமார் ஆகிய இருவரும் உடனடியாக கிணற்றில் குதித்து சிறுமியை காப்பாற்ற கிணற்றுக்குள் இருக்கும் படிக்கல்லில் அமர்ந்திருந்தனர்.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலர் பொன்னுசாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் குழு சுமார் அரை மணி நேரம் போராடி மூவரையும் பத்திரமாக மீட்டனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.