திருப்பூர் : கோழி பிடிக்கச் சென்று கிணற்றில் தவறி விழுந்த 10-ம் வகுப்பு மாணவியை தீயணைப்பு துறையினர் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து ராயம்பாளையம் கிராமத்தில் புலிக்காடு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் முருகேஷ். சொந்தமாக வேன் ஓட்டிவரும் இவரது மூத்தமகள் பவதாரிணி (வயது 16) என்பவர் அவிநாசி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை தங்களது வீட்டின் அருகே இருந்த விவசாய கிணறு ஓரமாக கோழி பிடிக்கச் சென்ற போது கிணற்றை சுற்றி படர்ந்திருத்த கொடியில் கால் சிக்கி தடுமாறி தவறி கிணற்றில் விழுந்துள்ளார்.
இதைக் கண்ட சிறுமியின் தாத்தா மாரய்யன் மற்றும் அருகில் கட்டிட வேலைக்கு வந்திருந்த மேஸ்திரி சிவக்குமார் ஆகிய இருவரும் உடனடியாக கிணற்றில் குதித்து சிறுமியை காப்பாற்ற கிணற்றுக்குள் இருக்கும் படிக்கல்லில் அமர்ந்திருந்தனர்.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலர் பொன்னுசாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் குழு சுமார் அரை மணி நேரம் போராடி மூவரையும் பத்திரமாக மீட்டனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.