தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அடுத்து பி ,பள்ளிப்பட்டி, லூர்த்துபுரம் பகுதியை சேர்ந்தவர் அருண் பிரசாத் (எ) லியோ (வயது 45) எம்,ஏ எம்,பில் பி,எச்,டி முனைவர் பட்டம் பெற்றவரான இவர் பொம்மிடி அருகே உள்ள பத்திரி ரெட்டி ஹள்ளி அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இவரது மனைவி தணிகைகேஸ்வரி 40 இவரும் அரசு பள்ளி ஆசிரியராக உள்ளார், இவர்களுக்கு தீபன், ரித்திக் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
வழக்கமாக பள்ளிக்கு சென்ற ஆசிரியர் நேற்று மதியம் தனது மனைவியிடம் வீட்டிற்கு செல்வதாக தகவல் கொடுத்து விட்டு சென்றுள்ளார்.
மீண்டும் அவரிடம் இருந்து போன் எதுவும் வராததால் வீட்டில் சென்று பார்க்குமாறு இவரது மனைவி தணிகைகேஸ்வரி கணவரின் தம்பி பீட்டரிடம் வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.
அவர் உறவினர்களும் சென்று பார்த்த போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டபட்டு கிடந்தது. பிறகு ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது ஆசிரியர் அருண்பிரசாத் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார்.
இது குறித்து தாகவல் அறிந்த பள்ளிப்பட்டி இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றினர்.
அப்போது ஆசிரியர் அருண்பிரசாத் 12 பக்கம் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில் அவர் தனது மரணத்திற்கு தனக்கு வீட்டு மனை நிலம் விற்ற அதே பகுதியை சார்ந்த நாமக்காரர் எனும் சிவசங்கர் மற்றும் அவரது மனைவி ஜெயா 45 வயது ஆகியோர் தான் என் இறப்பு காரணம், இவர்களிடம் வீடுக்கட்ட இடம் வாங்கி வீடு கட்டினேன், அதன் அருகே மேலும் இடம் உள்ளதாகவும் அதனையும் வாங்கிகொள்ள வற்புறுத்தினர்.
இதனால் தனது மனைவி நகை அனைத்தும் அடகு வைத்து 8 லட்சம் ரூபாய் கொடுத்தேன். ஆனால் அவர்கள் எனக்கு அந்த நிலத்தை எழுதிகொடுக்காமல் ஏமாற்றினர். இதனால் பணத்தை திருப்பி கேட்டேன் இதற்கு என் கும்பத்தையும், எனது நண்பர் குடும்த்தினருக்கும் பல்வேறு இடையூர் செய்தனர்.
பொய் வழக்கு போட்டு எனது நண்பரை சிறைக்கு அனுப்பினர். இதனால் நான் மனஉளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டேன் என எழுதி இருந்தார்.
இது போல் கடந்த இருதினங்களுக்கு முன் தருமபுரியில் அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் மனஉளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தெடர்ந்து நேற்று பொம்மிடி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.