Categories: தமிழகம்

கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பரவிய பயங்கர தீ… 2 நாள் போராட்டத்திற்கு பின் கட்டுக்குள் வந்தது..!!!

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் இரண்டு நாட்களாக பற்றி எரிந்த தீ கடும் போராட்டத்திற்கு பின் அணைக்கப்பட்டது.

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு 650 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ளது. இங்கு தினமும் சுமார் 1000 டன் குப்பைகள் சேகாரமாகிறது. இதில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. ஆனாலும் டன் கணக்கில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது.

இங்கு வெயில் காலங்களில் குப்பைகளில் அடிக்கடி தீப்பிடித்து எரிகிறது. இந்நிலையில் குப்பை கிடங்கில் தீப்பற்றி எரிந்தது. இதை அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் தீயை அணைக்க முடியவில்லை தொடர்ந்து புகை வந்து கொண்டே இருந்தது.

இதனால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து 40 க்கும் மேற்பட்ட வாகனங்களில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயணைக்கும் பணி நடந்தது. இதில் பல ஏக்கர் பரப்பளவில் டன் கணக்கில் குப்பைகள் எரிந்து சாம்பலானது.

இதனால் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் போராடி பொக்லையின் இயந்திர உதவியுடன் குப்பைகளை கிளறி தீயணைக்கப்பட்டது.

தீப்பிடிக்க என்ன காரணம் என்று தெரியவில்லை. குப்பையில் மீத்தேன் வாய்வு உற்பத்தியாகி தானாக தீப்பிடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தீயை அணைக்க வீரர்கள் கடும் போராட்டத்திற்கு பின் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இதனால் சுவாசக் கோளாறு, மூச்சு திணறல் போன்ற பாதிப்புகளால் அந்தப் பகுதி மக்கள் அவதிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

8 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

9 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

9 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

9 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

9 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

10 hours ago

This website uses cookies.