கன்னியாகுமரி : அதிவிரைவில் தமிழகத்திலும் கேரளாவிலும் அசுரர்கள் களையெடுப்பு நடந்து ஆட்சி அகற்றப்படும் என குமரி மாவட்டம் காளிமலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் காளிமலை பொங்கல் நிகழ்சியில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் நீட்டில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள், இரத்த தான கொடையாளர்கள், இயற்கை விவசாய்கள், பழங்குடியின மக்களுக்கு இலவச கல்வி அளிக்கும் ஆசிரியர் , இலவச மருத்துவம் அளிக்கும் மருத்துவர் சிறந்த ஆன்மீக யூட்டூப்பர் ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கபட்டது.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, யாரோ வந்து அமைச்சராகவோ, சட்டமன்ற உறுப்பினராகவோ இருக்க ஆண்டவர் விரும்பவில்லை, கட்சி தொண்டர்கள் , தலைவர்கள் நம்மை தயார்படுத்தி கொண்டு இருக்கிறோம்.
ஆன்மா சுத்தபடுத்தபட்டு கொண்டு அந்த பாதையில் பயணித்து கொண்டு இருக்கிறோம். நாம் தயார் நிலையில் இருக்கும்போது ஆண்டவன் கட்டளையிடுவான். அப்போது மிக விரைவில் அசுரர்கள் களையெடுப்பு நடக்கும் அந்த நேரத்தில் கேரளாவில் கம்யூனிஸ்டு ஆட்சி அகற்றப்படும் , தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி அகற்றப்படும் நம் ஆட்சி அமையும் என பேசினார். தொடர்ந்து பழங்குடியின மக்களிடம் அவர்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களோடு கலந்துரையாடலில் ஈடுபட்டார்
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
This website uses cookies.