Categories: தமிழகம்

வாங்கிய வாழைப் பழத்துக்கு பணம் கேட்ட வியாபாரிக்கு கத்தரிக்கோலால் குத்து : வடமாநில வாலிபரை வதக்கி எடுத்த மக்கள்!

வாங்கிய வாழைப் பழத்துக்கு பணம் கேட்ட வியாபாரிக்கு கத்தரிக்கோலால் குத்து : வடமாநில வாலிபரை வதக்கி எடுத்த மக்கள்!

விழுப்புரம் வி.மருதூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 29). இவர் விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் உழவர் சந்தை எதிரே இரவு நேரங்களில் தள்ளுவண்டியில் வாழைப்பழங்களை வைத்து விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் அவர் தள்ளுவண்டியில் வாழைப்பழம் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வெளிமாநிலத்தை சேர்ந்த ( கேரளா) 3 பேர் பணம் இல்லாமல் வாழைப்பழம் கேட்டுள்ளனர், அவர்கள் 3 பேரும் குடிபோதையில் இருந்தனர்.

மேலும் வாழைப்பழக்கடை காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர், அந்த சமயத்தில் விழுப்புரம் மருதூரை சேர்ந்த சரவணனின் நண்பரான காமராஜ் உள்ளிட்ட 2 பேர் அங்கு வாழைப்பழம் வாங்க வந்தனர்.

அப்போது அவர்கள் வெளி மாநிலத்தவர் தகராற்றில் ஈடுபட்டது கண்டு அவர்கள் இதை தட்டிக் கேட்டுள்ளனர், அவர்களுக்கும், வெளிமாநிலத்தை சேர்ந்த வாலிபர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. உடனே வாழைப்பழ வியாபாரி சரவணன், இங்கு ஏன் பிரச்சினை செய்கிறீர்கள், வேறு எங்காவது செல்லுங்கள் என்று கூறினார்.

இதில் ஆத்திரமடைந்த வெளிமாநில வாலிபர்களில் ஒருவர், அவன் வைத்திருந்த கத்திரிக்கோலை எடுத்து சரவணனை சரமாரியாக குத்தியதில் பலத்த காயமடைந்தார். இதை தடுக்க வந்த கமாராஜையும் அந்த வடமாநில வாலிபர் குத்தினார்.

இதில் காயமடைந்த 2 பேரும் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

மேலும் படிக்க: அண்ணனுக்கு நன்றி.. ராகுல் காந்தி குறித்து செல்லூர் ராஜு பதிவு : மாணிக்கம் தாகூர் ரிப்ளை!

அதற்குள் வெளிமாநில வாலிபர்கள் 3 பேரில் 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். ஒருவர் மட்டும் சிக்கிக்கொண்டார். அவரை பிடித்து பொதுமக்கள் தருமடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர், போலீசார் அவர்கள் குடிபோதையில் இருந்ததால் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து முதல் சிகிச்சை கொடுத்து அங்கு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் விழுப்புரத்தில் நள்ளிரவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படுகாயம் அடைந்த இரண்டு பேரும் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ

தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…

8 hours ago

சாதி, மதம் பார்த்து தலைவர்களை தேர்வு செய்யக்கூடாது : திருச்சி எம்பி துரை வைகோ பரபரப்பு பேச்சு!

மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…

8 hours ago

இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!

இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…

9 hours ago

ராசி முக்கியம் பிகிலு? மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி பெயர் வந்ததுக்கு இப்படி ஒரு காரணமா?

சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…

9 hours ago

தவெகவை விட பலத்தை காட்ட வேண்டும்… பரபரப்பை கிளப்பிய அதிமுக மூத்த தலைவர்!

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…

10 hours ago

என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?

கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…

10 hours ago

This website uses cookies.