கோவை செல்வபுரம் அருகே அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி இளம் பெண் உட்பட இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பீளமேடு சவுரிபாளையம் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் மனோஜ் (வயது 19). இவர் சரவணம்பட்டியில் உள்ள தனியார் மாலில் பணியாற்றி வந்தார்.
இவர் தனது இரு சக்கர வாகனத்தில் பூலுவப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சிவலிங்கம் என்பரது மகள் ஆர்த்தி (வயது 19) என்பவருடன் தனது இரு சக்கர வாகனத்தில் பேரூர் சாலையில் சென்றுள்ளார்.
அப்போது செல்வபுரம் தில்லைநகர் அருகே சென்ற போது முன்னாள் சென்ற 56-எண் அரசு பேருந்தை இடது புறமாக முந்திச் செல்ல முயன்றதாக தெரிகிறது. அப்போது நிலைதடுமாறிய இரு சக்கர வாகனம் சாலையில் சரிந்து விழுந்தது.
இதில் அரசு பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி மனோஜ் மற்றும் ஆர்த்தி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செல்வபுரம் போலீஸார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அரசு பேருந்தை ஓட்டி வந்த திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை சேர்ந்த பிரபு என்பவரிடம் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
துள்ளுவதோ இளமை படம் மூலம் தான் நடிகர் தனுஷ் நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் ஏராளமானோர் அறிமுக நடிகர்களாக இணைந்தனர்.…
தவெக தலைவர் விஜய் எங்களுக்கு ஆதரவளித்தால், நாங்கள் அவருக்கு ஆதரவாக நிற்பதில் எந்தத் தவறுமில்லை என 2013 ஆசிரியர் தகுதித்…
முதல்முறையாக சிம்பொனியை 36 நாட்களில் உருவாக்கி அதை லண்டனில் அரங்கேற்ற உள்ளார் இசைஞானி இளையராஜா. இது இந்திய நாட்டுக்கே பெருமையான…
தென்காசி அருகே தனது 8 மாத பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்ற தந்தையை போலீசார் கைது செய்து…
நடிகை திரிஷா தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமாகவும், 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து கதாநாயகியாகவும் வலம் வருகிறார். ரஜினி, கமல்,…
சென்னையில் இன்று (மார்ச் 6) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 45 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 20…
This website uses cookies.