புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் புதுக்கோட்டை கறம்பக்குடி சாலையில் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய பெருந்தலைவராக உள்ள மாலா ராஜேந்திரதுரைக்கும் ஒன்றிய ஆணையர் கருணாகரன் திலகவதி ஆகியோருக்கும் இடையே ஒப்பந்தப்புள்ளி பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஒன்றிய பெருந்தலைவர் மாலா ராஜேந்திரதுரை ஒன்றிய ஆணையர் அலுவலகத்தையும் ஒன்றிய பொறியாளர் அலுவலகத்தையும் நேற்று பூட்டு போட்டு பூட்டி சாவியை எடுத்துச்சென்ற சம்பவம் கறம்பக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூட்டு போட்டு பூட்டிய ஒன்றிய பெருந்தலைவர் மாலா ராஜேந்திரதுரை மீது ஒன்றிய ஆணையர்கள் கருணாகரன் மற்றும் திலகவதி கறம்பக்குடி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
ஆனால் இன்று வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இரண்டாவது நாளாக இன்றும் ஒன்றிய ஆணையர் அலுவலகம் மற்றும் ஒன்றிய பொறியாளர் அலுவலகம் பூட்டப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி பொதுமக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து மனு அளிக்க இருப்பதாக ஒன்றிய ஆணையர்கள் தெரிவித்துள்ளனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.