நெல்லை புதிய பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு முக்காணி நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது.
நெல்லை கிருஷ்ணாபுரம் அருகே உள்ள ஆட்சி மடம் அருகே சென்று கொண்டிருந்தபோது ராமநாதபுரத்தில் இருந்து ஒரு குடும்பத்தினர் வேனில் திருச்செந்தூர் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு விருதுநகரில் ஒரு கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக நெல்லை வந்து கொண்டிருந்தனர்.
ஆட்சி மடம் அருகே வரும் போது பேருந்தின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் நிலை தடுமாறிய பேருந்து எதிரே வந்த வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் வேனின் முன் பகுதி முழுவதும் சேதம் அடைந்தது. பேருந்து வேனில் மோதிய வேகத்தில் சாலையில் இருந்து பள்ளத்தில் இறங்கி நின்றது . இரு வாகனத்திலும் வந்தவர்களும் விபத்தில் காயம் அடைந்தனர். விபத்தை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் தகவல் அறிந்து வந்த போலீசாரும் மீட்பு பணியில் ஈடுபட்டு விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். வேனை ஓட்டி வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த பழனி செல்வம் என்பவரை அப்பகுதி மக்கள் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்பு வேனில் இருந்து வெளியே எடுத்தனர்.
பின்னர் மீட்கப்பட்ட 29 பேரையும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து நடந்த இடத்தில் கண்ணாடி துகள்கள் சாலை முழுவதும் சிதறி கிடந்ததுடன், நெல்லை – திருச்செந்தூர் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது . இந்த விபத்து குறித்து சிவந்திபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…
பிரியாங்காவுக்கு நடந்த 2வது திருமணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் திருமணம் செய்த வசி சாச்சி குறித்து பல…
சச்சின் ரீரிலீஸ் விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்து மாஸ் ஹிட் அடித்த “சச்சின்” திரைப்படம் கடந்த 18…
90களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இடையழகி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சிம்ரன், நடிப்பு திறமையால உச்சகட்ட நடிகையானார்.…
கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூரில் 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் 253…
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
This website uses cookies.