Categories: தமிழகம்

காதலிப்பதாக கூறி சீரழித்த அரசியல் பிரமுகர்.. ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்.. கலெக்டர் ஆபீஸில் கதறும் இளம்பெண்..!

கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரை கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த இளம் பெண் ஒருவர் தற்போது கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பல இடங்களுக்கு விக்னேஷ் தன்னை அழைத்து சென்றதாக கூறியுள்ளார். மேலும், பல இடங்களில் ஊர் சுற்றியபோது ஓட்டலில் தனிமையில் ஒன்றாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

விக்னேஸ் உடன் நெருக்கமாக பழகியதில், தனக்கு குழந்தை உண்டாகி மூன்று மாதம் கர்ப்பிணியாக இருந்ததாகவும், அப்போது விக்னேஷின் பெற்றோர் தன்னை அழைத்து கர்ப்பத்தை கலைத்துவிட்டால் திருமணம் செய்து வைக்கிறோம் என்று கூறியதாக நம்பிக்கை கர்ப்பத்தை கலைத்து விட்ட நிலையில், விக்னேஷின் பெற்றோர் திருமணத்திற்கு மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக போத்தனூர் மகளிர் காவல் நிலையத்திலும் கோவை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தோம். தற்போது, வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். திமுகவை சேர்ந்தவர் என்பதால் காவல் நிலையத்தில் புகாரை ஏற்க மறுக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து, தான் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

விக்னேஷுக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து விட்டதாகவும், தற்போது தன்னை மீண்டும் ஆசைக்கு இணங்குமாறு அழைத்து மிரட்டுவதாகும். இல்லாவிட்டால் தாங்கள் காதலித்தபோது எடுத்த புகைப்படங்களையும் தனிமையில் இருந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவேன் என்று மிரட்டி வருவதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். எனவே தன்னை ஏமாற்றியதோடு மட்டுமல்லாமல் தனது குடும்பத்திற்கும் கொலை மிரட்டல் விடுத்த விக்னேஷ் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இளம் பெண் சினேகா கேட்டுக் கொண்டுள்ளார்.

Poorni

Recent Posts

ஜிவி பிரகாஷை வம்புக்கு இழுக்கறியா? திவ்யபாரதியை ஒருமையில் திட்டிய பிரபலம்.. புது பஞ்சாயத்து ஆரம்பம்!

ஜிபி பிரகாஷ் - சைந்தவி பள்ளி பருவத்திலேயே காதலித்து வந்தனர். தொடர்ச்சியாக பல வருடமாக காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும்…

45 minutes ago

கெரியருக்கே ஆப்பு வைத்த மேனேஜர்! ஸ்ரீகாந்த் பக்கத்துல சனியன் பாய் விரிச்சி படுத்திருக்கான் போல?

மேனேஜரால் வந்த வினை… நடிகர் ஸ்ரீகாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமானபோது ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகவே வலம் வந்தார். ஒரு இளம்…

1 hour ago

பென்சிலுக்காக மாணவனை அரிவாளால் வெட்டிய 8ஆம் வகுப்பு மாணவன்.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி தனியார் பள்ளி இன்று வழக்கம் கோல செயல்பட தொடங்கியது. அந்த சமயம் 8ஆம்…

2 hours ago

“இளையராஜா ஒரு பண பைத்தியம்”… தானாக ஆஜர் ஆகி அடிவாங்கும் அஜித் ரசிகர்கள்! ஏன் இப்படி?

இது ரசிகர்களுக்கான படம்… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் கடந்த வாரம் வெளியான…

3 hours ago

மணிரத்னம்கிட்ட நான் அப்படி பண்ணிருக்கவே கூடாது, எல்லாம் என் தப்புதான்- மனம் நொந்துப்போன ஸ்ரீகாந்த்…

சரிவை கண்ட நடிகர் “ரோஜா கூட்டம்” திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். இவர் நடிக்க வந்த புதிதில் ஒரு…

4 hours ago

பக்கத்து வீட்டு 13 வயது சிறுமியை கடத்தி வன்கொடுமை… தாலி கட்டி குடும்பம் நடத்திய இளைஞர்!

கோவை அடுத்து சூலூர் பகுதியில் உள்ள பஞ்சாலையில் மதுரையைச் சேர்ந்த தம்பதியினர் தொழிலாளர்களாக பணி புரிந்து வந்தனர். இவர்கள் தங்களது…

4 hours ago

This website uses cookies.