கோவை: கோவையில் வீட்டிற்குள் நுழைய முயன்ற கண்ணாடி விரியன் பாம்பிடம் ‘வராதே, திரும்பி போ’ என கட்டளையிட அதனை கேட்டு அப்படியே திரும்பி சென்ற வீடியோ வைரலாகியுள்ளது.
கோவையில் பாம்பு ஒன்று ஒருவரின் சொல்பேச்சு கேட்டு வீட்டுக்குள் வராமல் சென்றுள்ளது ஆச்சரியமடைய செய்துள்ளது. கோவை மாவட்டம் துடியலூர் அருகே கதிர்நாயக்கன் பாளையம், லட்சுமி நகரில் வசிப்பவர் கனகராஜ்.
எலக்ட்ரீசியன் தொழில் செய்துவரும் இவரது வீட்டின் வாசலில் நேற்று மாலை 6 மணியளவில் 4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று வீட்டிற்குள் நுழைய முயன்றுள்ளது. இதனை கவனித்த கனகராஜ், பாம்பிடம் ‘போ.. இங்கே வராதே.. திரும்பி காட்டுக்குள்ளே போ..’ என கட்டளையிட அதனை கேட்ட அப்பாம்பு, திரும்பி சென்றுள்ளது.
இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. அங்கிருந்து சென்ற பாம்பு அருகில் இருந்த பள்ளத்திற்குள் விழுந்துள்ளது. இதனையடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த கோவை வனத்துறையினர் பாம்பை பிடித்து காட்டுக்குள் விட்டனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.