காஞ்சிபுரம் : கிராம சபை கூட்டத்தில், செங்காடு நியாயவிலை கடைகளில் அரிசி மற்றும் பொருட்கள் தரமாக இல்லை என ஒரு பெண் ஆவேசமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே செங்காட்டில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் கலந்து பொதுமக்களிடம் உரையாற்றினார். அப்போது, ஊராட்சிகளின் செயல்பாடு, வளர்ச்சிப் பணிகள், ஊரகப் பகுதி மக்களின் குறைகளை முதலமைச்சர் கேட்டறிந்தார்.
ஆட்சி தொடங்கி ஒரு ஆண்டு ஆகப்போகிறது. ஆட்சி எப்படி உள்ளது என பொதுமக்களிடம் கேள்வி கேட்டார் முதலமைச்சர். கடந்த 10 வருடங்களாக கிராம சபை கூட்டம் முறையாக நடைபெறவில்லை என்ற முதலமைச்சர், ஆண்கள் யாரும் பேசக்கூடாது பெண்களிடம் தான் கேள்வி கேட்பேன் என்றார்.
செங்காடு பகுதியில் பலர் கிட்னி செயலிழந்தது பற்றி பொதுமக்கள் முதல்வரிடம் கூறினர். இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் கூறினார்.
இதனைத்தொடர்ந்து, செங்காடு நியாயவிலை கடைகளில் அரிசி மற்றும் பொருட்கள் தரமாக இல்லை என ஒரு பெண் ஆவேசமாக முதல்வரிடம் கேள்வி எழுப்பினார். யாரிடம் வேண்டுமானாலும் கூறுங்கள் என நியாய விலை கடை ஊழியர்கள் பேசுவதாக கூறியதாக ஒரு பெண் ஆவேசமாக தெரிவித்ததால், நியாயவிலை கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கூறினார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ‘மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது எனக்கு பெருமையாக உள்ளது. ஒரு நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்றால், ஊராட்சிகளில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி தன்னிறைவு அடைய வேண்டும்.
ஜாதி மத பேதங்களை அனைவரும் ஒற்றுமையுடன் ஒருமித்த மனத்துடன் வாழ வேண்டும் தந்தை பெரியார் பெயரில் பெரியார் சமத்துவபுரம் திட்டம் கொண்டு வரப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போல கிராம செயலகம் உருவாக்கப்பட உள்ளது.
திராவிட மாடல் ஆட்சியை உலகத்திற்கு உணர்த்த உள்ளோம். இந்த கிராமத்தில் 12 லட்சம் ரூபாய் மதப்பீட்டில் மதுரை வீரன் கோவில் குளம் சீரமைக்கப்படும்’ என்று கூறினார்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.