கோயில் குண்டம் திருவிழாவில் தீ மிதிக்க குழந்தையுடன் இறங்கிய பெண்.. தவறி விழுந்த சோகம்.. பரபரப்பு காட்சி!!
மன்னார்குடியில் கோவில் திருவிழாவில் தீ மிதித்த பெண் குழந்தையுடன் தீ குழியில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார்குடி சத்ய மூர்த்திமேட்டுதெருவில் உள்ள ஏழை மாரியம்மன் கோவிலில் கடந்த 18 ஆம் தேதி முதல் திருவிழா நடைபெற்று வருகிறது.
இன்று மதியம் மன்னார்குடி திருப்பாற்கடல் குளக்கரையில் இருந்து பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் பால்குடம், காவடி, எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
மாலையில் பால்குட ஊர்வலம் கோவிலை வந்தடைந்தது. பின்னர் கோவில் வாசலில் அமைக்கப்பட்டிருந்த தீக் குழியில் பக்தர்கள் இறங்கி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.
அப்போது சத்ய மூர்த்தி மேட்டு தெருவை சேர்ந்த உமா என்ற பெண் தனது 5 வயதுடைய பேத்தியை இடுப்பில் சுமந்து தலையில் பால்குடத்துடன் திக்குளியில் இறங்கினார். அப்போது கால் இடறி அந்த பெண் குழந்தையுடன் தீ குழியில் விழுந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக குழந்தை மற்றும் பெண்ணை மீட்டனர்.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக குழந்தை மற்றும் பெண் இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். கோவில் திருவிழாவில் குழந்தையுடன் பெண் ஒருவர் தீக்குழியில் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி காண்பவர்களை பதைபதைக்க வைக்கிறது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.