காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருகாலிமேடு வீரசிவாஜி தெருவில் மோகன் என்பவர் தன்னுடைய மனைவி இளவரசியுடன் (வயது 36) வாடகை வீட்டில் மேல் மாடியில் குடியிருந்து வருகிறார்.
இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகனும் 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மோகன் பயோ கவர்களை ஏஜென்சி எடுத்து கடைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறார்.
இன்று மாலை காஞ்சிபுரம் நகரில் பலத்த சூரைக்காற்றுடன் லேசான தூறல், இடி மற்றும் மின்னல் அவ்வப்போது ஏற்பட்டது. இளவரசி வீட்டின் மாடியில் நடந்து கொண்டிருந்தபோது இவர் அருகே மின்னல் தாக்கியுள்ளது. அந்த அதிர்ச்சியில் இளவரசி மூர்ச்சையாகி விழுந்து விட்டார்.
அவரை காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்து பரிசோதனை மேற்கொண்டதில் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் மின்னல் தாக்கிய அறிகுறிகள் ஏதும் இளவரசியின் உடலில் காணப்படவில்லை என்றும் மின்னல் தாக்கிய அதிர்ச்சியிலேயே உயிரிழந்திருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக தாலுக்கா காவல் ஆய்வாளர் பேஸில் பிரேம் ஆனந்த் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
This website uses cookies.