காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருகாலிமேடு வீரசிவாஜி தெருவில் மோகன் என்பவர் தன்னுடைய மனைவி இளவரசியுடன் (வயது 36) வாடகை வீட்டில் மேல் மாடியில் குடியிருந்து வருகிறார்.
இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகனும் 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மோகன் பயோ கவர்களை ஏஜென்சி எடுத்து கடைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறார்.
இன்று மாலை காஞ்சிபுரம் நகரில் பலத்த சூரைக்காற்றுடன் லேசான தூறல், இடி மற்றும் மின்னல் அவ்வப்போது ஏற்பட்டது. இளவரசி வீட்டின் மாடியில் நடந்து கொண்டிருந்தபோது இவர் அருகே மின்னல் தாக்கியுள்ளது. அந்த அதிர்ச்சியில் இளவரசி மூர்ச்சையாகி விழுந்து விட்டார்.
அவரை காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்து பரிசோதனை மேற்கொண்டதில் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் மின்னல் தாக்கிய அறிகுறிகள் ஏதும் இளவரசியின் உடலில் காணப்படவில்லை என்றும் மின்னல் தாக்கிய அதிர்ச்சியிலேயே உயிரிழந்திருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக தாலுக்கா காவல் ஆய்வாளர் பேஸில் பிரேம் ஆனந்த் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…
This website uses cookies.