Categories: தமிழகம்

வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்த பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம் : வடமாநில இளைஞர்கள் வெறிச்செயல்…திருப்பூரில் அரங்கேறிய கொடூரம்!!

திருப்பூர் : பல்லடம் அருகே வீட்டில் தனியே இருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த திருமணமான பெண்ணுக்கு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே எம். ஊத்துக்குளி பகுதியில் உள்ள பிரபல டைல்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த திருமணம் ஆகி இரண்டு வருடங்களை ஆன திரிபுல் இஸ்லாம் என்பவர் தனது 21 வயது நிரம்பிய மனைவியுடன் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தங்கி வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு திரிபுல் இஸ்லாம் வேலைக்கு சென்று விட்ட நிலையில் அந்நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள வீட்டில் அவரது மனைவி மட்டும் தனியே இருந்துள்ளார்.

அப்போது அதே நிறுவனத்தில் வேலை செய்து வரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களான அமருள் இஸ்லாம், அனீப் அலி, இப்ராஹிம் அலி ஆகிய மூவரும் வீட்டினில் புகுந்து தனியே இருந்த பெண்ணுக்கு பாலியல் பலாத்கார தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதை அடுத்து அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அவர்கள் மூன்று பேரும் அங்கிருந்து ஓடி விட்டதாகவும் சக தொழிலாளர்கள் பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடம் விரைந்து சென்ற மகளிர் காவல் ஆய்வாளர் பர்வீன் பானு தலைமையில் ஆன போலீசார் அப்பெண்ணை மீட்டு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு மருத்துவர்கள் அப்பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சையும் பரிசோதனையும் செய்தனர். அதனைத் தொடர்ந்து அப்பெண்ணின் வாக்குமூலத்தின் பேரில் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மகளிர் போலீசார் வீட்டில் தனியே இருந்த அசாம் பெண்ணுக்கு பாலியல் பலாத்கார தொல்லை கொடுத்த புகாரின் பேரில் அமருள் இஸ்லாம், அனீப் அலி, இப்ராஹிம் அலி ஆகிய மூவரையும் கைது செய்து பின்னர் சிறையில் அடைத்தனர்.

பல்லடம் அருகே வீட்டில் தனியே இருந்த திருமணம் ஆகி இரண்டு வருடங்களே ஆன அசாம் மாநில பெண் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மக்களவைத் தொகுதி குறைப்பா? ஸ்டாலின் அழைப்பு.. அதிமுக, பாஜகவின் நிலைப்பாடு என்ன?

தொகுதி மறுசீரமைப்பு நடந்தால், தமிழகத்தில் 31 தொகுதிகள்தான் இருக்கும். 8 தொகுதிகளை இழக்க வேண்டியச் சூழல் ஏற்படும் என முதலமைச்சர்…

9 minutes ago

கணவரை இழந்த நடிகைகளுடன் டேட்டிங் : பிரபலத்தின் அந்தரங்க லீலைகள் அம்பலம்!

கணவரை இழந்த நடிகைகளை குறி வைத்து அவர்களுடன் சில பல நாட்கள் பழகி கழட்டி விடுவதே இந்த பிரபல நடிகரின்…

52 minutes ago

இந்தி வாலாக்களாக மாற்ற முயற்சி.. திருமாவளவன் கடும் விமர்சனம்!

இந்தியாவை ஒரே நாடு ஒரே மொழி என்ற அடிப்படையில் மாற்ற வேண்டும் எனும் முயற்சி நீண்ட காலமாக நடந்து வருகிறது…

52 minutes ago

திமுக ‘இந்த’ தோற்றத்தை உருவாக்குகிறது.. தமிழிசை கடும் சாடல்!

பாஜக, தமிழுக்கு எதிராக செயல்படுவது போல் தோற்றம் உருவாக்கப்படுகிறது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். கோயம்புத்தூர்:…

2 hours ago

ஆசையை காட்டி மோசம் செய்த லைகா நிறுவனம்.. விஜய் மகனுக்கு கல்தா!

லைகா நிறுவனம் தமிழ் சினிமாவை கத்தி படம் மூலம் தயாரிக்க ஆரம்பித்தது. அந்த படம் லைகா நிறுவனத்திற்கு நல்ல லாபத்தை…

2 hours ago

’தமிழக மக்களை முட்டாளாக வளர்க்க வேண்டும் என..’ பாஜக ராம சீனிவாசன் பரபரப்பு பேச்சு!

பள்ளிகளில் ஆங்கிலமும் குறைவாக கற்றுக் கொடுக்க வேண்டும் என திமுக கொள்கை வைத்துள்ளதாக பாஜகவின் ராம சீனிவாசன் கூறியுள்ளார். திருச்சி:…

2 hours ago

This website uses cookies.