தமிழகம்

பெண்ணிடம் இருந்த பணப்பையை துணிகரமாக கொளையடித்த பெண்கள்.. விரட்டி புரட்டியெடுத்த சிங்கப்பெண்..(வீடியோ)!

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் இவரது மனைவி மஞ்சுளா(வயது48), இவர் மாமல்லபுரம் பஸ் நிலையம் அருகில் கட்டண கழிப்பித்தை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் மஞ்சுளா தனது குடும்ப தேவைக்காக மாமல்லபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இன்று ரூ.55 ஆயிரம் பணம் எடுத்து கொண்டு ஒரு பிளாஸ்டிக் கவரில் அதனை போட்டு கொண்டு வங்கி வாசல் படியை தாண்டி செல்லும் போது, அங்கு வங்கி வாசலில் வாடிக்கையாளர் போர்வையில் அமர்ந்து இருந்த 3 வட மாநில பெண்கள், மஞ்சுளா சுதரிக்கும் நேரத்தில் பிளாஸ்டிக் கவரை பிளேடால் கீறி அறுத்துவிட்டு, ரூ 55 ஆயிரத்துடன் அங்கிருந்து தப்ப முயன்றனர்.

பிறகு சுதாரித்து கொண்ட மஞ்சுளா தன்னுடைய பணத்தை எடுத்து கொண்டு அப்பெண்கள் ஓட்டம் பிடிப்பதை கண்டு, கையில் பணத்துடன் தப்பிக்க முயன்ற ஒரு பெண்ணை துரத்திபிடித்தார். நடுரோட்டிலேயே தலைமுடியை பிடித்து மஞ்சுளா அப்பெண்ணுக்கு தர்மஅடி கொடுத்தார்.

அதற்குள் அங்கு பொதுமக்கள் கூடிவிடவே ஒரு ஆட்டோவில் தப்ப முயன்ற மற்ற 2 பெண்களையும் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். பிறகு தகவல் அறிந்து அங்கு வந்த மாமல்லபுரம் போலீசார் 3 பெண்களையும் கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தியதில் 3 பேரும் மத்திய பிரதேசம் மாநிலம், ராஜ்புத் மாவட்டம், ஜான்டிகடை கிராமத்தை சேர்ந்த நிஷா(வயது35), பூஜா(வயது30), பிரவீனா(வயது40) என தெரிய வந்தது. ஒரே ஊரை சேர்ந்த இந்த 3 பெண்களும், அரசு பஸ்சில் பயணிக்கும் பெண்களிடம நகை, பர்சு பறிப்பது போன்ற குற்ற செயல்களில் பல்வேறு இடங்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

பிறகு மஞ்சுளாவிடம் திருடி சென்ற ரூ.55 ஆயிரம் பணத்தை அந்த பெண்களிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்து அவரிடம் ஒப்படைத்தனர். பட்டப்பகளில் வட மாநில பெண்கள் வங்கி வாசலில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் மாமல்லபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பெண்களில் பூஜா என்பவரை ஒரு சிங்கப்பெண் போல் துரத்தி சென்று மடக்கிபிடித்து தர்மமடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த மஞ்சுளாவின் தைரியத்தையும், தன்னம்பிக்கையும் பொதுமக்கள் பலர் பாராட்டினர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தூக்கத்திலேயே உயிர் பிரிந்த நடிகர்.. திரையுலகம் அதிர்ச்சி..!!

சாப்பிட்டு விட்டு தூங்க சென்ற நடிகருக்கு தூக்கத்திலேயே உயிர் பிரிந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதையும் படியுங்க: இந்த பாலா…

17 minutes ago

இந்த பாலா படத்தில் முதலில் அஜித்தான் நடிக்கவேண்டியது! ஆனால் நான் கடவுள் இல்லை?

நிறைவேறாத கூட்டணி பாலா இயக்கிய “நான் கடவுள்” திரைப்படத்தில் முதலில் நடித்தது அஜித்குமார்தான். இந்த தகவல் சினிமா ரசிகர்கள் பலரும்…

22 minutes ago

அதிமுக – பாஜக கூட்டணி அறிவிப்பால் பீதியில் CM : இபிஎஸ் பதிலடி!

அதிமுக - பாஜக கூட்டணி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பாஜகவுடன் கூட்டணியே அமைக்க மாட்டோம் என கூறி வந்த எடப்பாடி…

1 hour ago

நயினார் நாகேந்திரனை முதல்வர் வேட்பாளரா போடுங்க : கொளுத்தி போட்ட பாஜக தலைவர்!!

அதிமுக உடன் மீண்டும் பாஜக கூட்டணி போடுவதாக நேற்று சென்னை வந்த அமித்ஷா கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.…

2 hours ago

லோகேஷ் கனகராஜ் பட நடிகருக்கு இப்படி ஒரு பரிதாப நிலையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

லோகேஷ் கனகராஜ் பட ஹீரோ… “வழக்கு எண் 18/9” திரைப்படத்தின் மூலம் கோலிவுட் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீ. இவர்…

2 hours ago

தே.ஜ கூட்டணிக்கு வாங்க… முக்கிய கட்சியிடம் பேச்சுவார்த்தை நடத்தும் எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் இப்போதே கூட்டணி கணக்கு,…

3 hours ago

This website uses cookies.