விபத்தில் சிக்கி ரத்தம் கிடைக்காமல் உயிரிழந்த இளைஞர் : இறந்து போன இளைஞருக்கு நண்பர்கள் செய்த இரத்த தானம்.. நெகிழ்ச்சி சம்பவம்!!
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் கோபால் இவரது மகன் விக்னேஷ் , இவர் தனது கிராமத்தில் இருந்து இரு சக்கர வாகனத்தில் உறவினர் ஒருவரை திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்று திரும்பி வரும் வழியில் ஏற்பட்ட வாகன விபத்தில் விக்னேஷ் பலத்த காயம் அடைந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நண்பர்கள் விக்னேஷ் மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
விபத்தில் காயமடைந்த செந்தில் அதிகபடியான இரத்தம் இழந்ததாலும், அவர் சிகிச்சைக்கு தேவையான இரத்தம் கிடைக்காத காரணத்தால் செந்தில் உயிரிழந்தார்.
போதிய இரத்தம் கிடைக்காமல் உயிரிழந்த தங்களது நண்பனின் நினைவாகவும், இரத்தம் கிடைக்காமல் யாரும் உயிரிழக்க கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உயிரிழந்த விக்னேஷ் நண்பர்கள் 60க்கும் மேற்ப்பட்டோர் கோட்டூர் பகுதியில் இரத்ததானம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நண்பனின் நினைவாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இரத்தானம் வழங்கிய நண்பர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி அனைவரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
நண்பர்கள் வழங்கிய இரத்தம் முழுவதும் ஏழை எளியவர்கள் பயன்பெறும் வகையில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.