Categories: தமிழகம்

சோதனை செய்ய வந்த பறக்கும் படையினரின் வாகன கண்ணாடி உடைத்த இளைஞரால் பரபரப்பு : விசாரணையில் பகீர்!

சோதனை செய்ய வந்த பறக்கும் படையினரின் வாகன கண்ணாடி உடைத்த நபரால் பரபரப்பு : விசாரணையில் பகீர்!

நடைபெற உள்ள லோக்சபா தேர்தலை முன்னிட்டு மயிலம், செஞ்சி, திண்டிவனம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு தலா மூன்று வாகனங்கள் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு வாகனங்களில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பொருட்கள் மற்றும் ரொக்கப் பணம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு திண்டிவனத்தில் காவேரிப்பாக்கம் அருகே நிலையான கண்காணிப்புக் குழு பொறுப்பாளர் விஜய் சங்கர் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அவ்வழியே வந்த இளைஞர் வாகனத்தை தடுத்து நிறுத்தி முன்பக்க கண்ணாடியை தனது கையால் சேதப்படுத்தி உள்ளார். இதுகுறித்து திண்டிவனம் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் திண்டிவனம் கிடங்கல் – 2 பகுதியை சேர்ந்த இளங்கோவன் மகன் விக்னேஷ்வர் (26) என்பதும், மது போதையில் பறக்கும் படையினரை வழிமறித்து தகராறு ஈடுபட்டது தெரிய வந்தது.

இதனை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விக்னேஸ்வரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

தேர்தல் பறக்கும் படை வாகனத்தை வழிமறித்து முன்பக்க கண்ணாடியை சேதப்படுத்திய சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பொது வெளியில் அசிங்கப்படுத்திய கமல்ஹாசன்; ஒருத்தரை இப்படியா அவமானப்படுத்தனும்? அடப்பாவமே

விண்வெளி நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் தனது உலக நாயகன் என்ற பட்டத்தை துறந்தாலும் விண்வெளி நாயகன் என்று அவரை இப்போது…

6 minutes ago

75 வயது நடிகருக்கு மனைவியாக நடித்த 30 வயது நடிகை.. ஒப்புக்கொண்டது ஏன்? கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

விசித்திரமான வித்தியாசமான கதைகள் பெரிய திரையில் நடப்பதுண்டு. ஆனால் அரைச்ச மாவையே அரைக்கும் சின்னத்திரையில் வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல் உருவாகி…

53 minutes ago

சூர்யாவுக்கு முன்னாடி SIX PACKS வெச்சவன் எவன் இருக்கான்? அனல் பறந்த நடிகரின் பேச்சு!

நடிகர் சூர்யா தற்போது ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு படம், கங்குவா 2…

1 hour ago

சிறுவன் அன்புக்கரசின் அன்புக்கு கட்டுப்பட்ட தமிழக அரசு.. இன்ப அதிர்ச்சி கொடுத்த அமைச்சர்!

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே P.புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த ஜனவரி மாதம் 35 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக…

2 hours ago

குடிக்க தண்ணீர் கேட்டு தம்பதியை தாக்கி நகை பறிப்பு : மர்மநபர்களை தேடும் போலீஸ்..!!

சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…

17 hours ago

பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!

டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…

18 hours ago

This website uses cookies.