சென்னை திருவொற்றியூர் திருநகர் 1வது தெருவை சேர்ந்த பத்மாவுக்கு இரண்டு மகன்கள். நித்தேஷ் வயது 20 சஞ்சய் வயது 14 இரண்டு மகன்கள் இருந்த நிலையில், பத்மாவின் மூத்த மகன் நித்தேஷ் தனது தாய் பத்மா மற்றும் தம்பி சஞ்சய் ஆகிய இருவரையும் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார்.
பின்னர், அவர்கள் இருவரின் சடலத்தையும் கோணிப்பையில் கட்டி மறைத்து வைத்த பின்னர் உறவினர்களுக்கு போன் மூலமாக மெசேஜ் செய்து தகவல் அனுப்பினார். அவர் உறவினர்களுக்கு, அனுப்பிய மெசேஜில் தாய், தம்பியை கொலை செய்ததாகவும், தன்னை தேட வேண்டாம் தானும் தற்கொலை செய்யப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவொற்றியூர் போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து, வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி சென்ற நித்தேஷ் என்பவரை தேடி வருகின்றனர். முன்னதாக, கல்லூரி படிப்பில் 14 அரியர் இருந்ததை முடிக்க சொல்லி கண்டித்ததால் தாய் மற்றும் தம்பியை நித்தேஷ் கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே, திருவொற்றியூர் கடற்கரையில் மறைந்திருந்த நித்தேஷை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…
ஸ்ருதிஹாசனின் பிரேக்கப் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார். இருவரும் லிவ்…
புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…
மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…
This website uses cookies.