கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் வெட்டுக்காட்டுவிளை பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரின் 14-வயதான மகள் சனிக்கிழமை இரவு வீட்டருகே உள்ள புதிய வீட்டின் கிரஹ பிரவேச விழாவில் கலந்து கொள்வதற்காக தாயுடன் சென்றுள்ளார்
சிறுமி சக உறவுக்காற சிறுமிகளுடன் வீட்டை சுற்றி பார்த்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்த போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த 25-வயதான வாலிபர் பிரசாந்த் என்பவர் அந்த சிறுமியை அழைத்து உனக்கு செல்போனில் பேய் படம் காட்டி தரட்டுமா என கேட்டுள்ளார்.
சிறுமியும் ஆர்வத்துடன் சரி என்று சொல்ல இருட்டில் தான் நன்றாக தெரியும் என கூறி சிறுமியை அருகில் உள்ள வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்து சென்ற பிரசாந்த் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
சிறுமி அலறி சத்தம் போடவே பிரசாந்த் அங்கிருந்து தப்பியோடிய நிலையில் உறவினர்கள் சிறுமியை மீட்டனர். சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில் விசாரணை நடத்திய போலீசார் வாலிபர் பிரசாந்த் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் அவரை தேடி வந்த நிலையில் அவரை குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
This website uses cookies.