கொலை வழக்கில் இருந்து ஜாமீனில் வெளிவந்த இளைஞர்… தாய், மனைவி, குழந்தைகள் கண்முன்னே வெட்டிக் கொன்ற கும்பல்!

Author: Udayachandran RadhaKrishnan
8 ஜூலை 2024, 11:41 காலை
Murde
Quick Share

திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் இருந்து மொட்டணம்பட்டி செல்லும் சாலையில் உள்ள டிவைன் நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி மஞ்சுளா இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளது.

இவர் சுள்ளான் என்பவரை 2020 ஆம் ஆண்டு வெட்டி படுகொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு தற்பொழுது ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

மேலும் திண்டுக்கல்லில் இருந்தால் எதிரிகளால் தனது உயிருக்கு ஆபத்து என்ற நிலையில் தற்பொழுது திருப்பூரில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் மனைவி மற்றும் குழந்தைகளை திருப்பூர் அழைத்துச் செல்வதற்காக தனது வீட்டிற்கு வந்துள்ளார். இன்று 07.07.24 இரவு தனது வீட்டில் தாய், அக்காவுடன் அமர்ந்து உணவு அருந்தி கொண்டிருந்தார்.

அப்பொழுது அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் திடீரென்று வீட்டுக்குள் புகுந்து தாய் கண்முன்னே வினோத்தை வெட்டி படுகொலை செய்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீசார் வினோத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கொலை நடந்த இடத்தில் காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

விடியா திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கின்ற நிலையில் நேற்றைய முன்தினம் வேடப்பட்டி பகுதியில் கூலித்தொழிலாளி பாண்டி என்பவர் மது போதையில் ஏற்பட்ட தகராறு வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அச்சத்தில் இருந்த பொதுமக்களை தற்போது 48 மணி நேரத்தில் மேட்டுப்பட்டி பகுதியில் வினோத்குமார் என்பவர் வீடு புகுந்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் மேலும் அச்சத்திலும், அதிர்ச்சியிலும் பொதுமக்கள் உறைந்துள்ளனர்.

  • Centipedes திருப்பதி கோவில் அன்னதான உணவில் பூரான்.. லட்டை தொடர்ந்து அடுத்த சர்ச்சையால் பக்தர்கள் கொந்தளிப்பு!
  • Views: - 229

    0

    0