திருப்பூர், பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் பள்ளியில் படிக்கும் தனது தங்கையை அழைத்து வர மாதேஷ் என்ற வாலிபர் வினோத்குமார், தாமஸ்குட்டி உள்ளிட்ட தனது நண்பர்களை அழைத்து சென்றுள்ளார்.
முன்னதாக, வினோத்குமார் பிறந்தநாளை முன்னிட்டு அனைவரும் மது அருந்தியுள்ளனர். இந்நிலையில் மாதேஷ், தனது நண்பர்கள் வினோத்குமார், தாமஸ்குட்டி தனது தங்கையை பள்ளியிலிருந்து வெளியில் அழைத்து வரும் போது உடன் வந்த தாமஸ்குட்டி அங்கு வந்த பள்ளி மாணவி ஒருவரை தாக்கி விட்டு தப்பி உள்ளார்.
இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடன் சென்ற மாதேஷ், வினோத்குமார் இருவரையும் பிடித்து தாக்கினர். இதில் இருவருக்கும் ரத்த காயம் ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தெற்கு போலீசார் இளைஞர்களை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட விசாரணையில், தாமஸ்குட்டி அப்பள்ளியில் படிக்கும் மாணவியை விரும்பியதாகவும், இதுதொடர்பாக பள்ளி மாணவியை தாக்கியதாகவும் தெரிய வந்துள்ளது.
மேலும் பள்ளி மாணவியை தாக்கி விட்டு தப்பி ஓடிய தாமஸ் குட்டியை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
இசைப்புயலுக்கு வந்த சோதனை ஏ.ஆர்.ரஹ்மான் என்னும் இசைப்புயல் 32 வருடங்களுக்கு மேல் வீரியம் குறையாமல் வீசிக்கொண்டே இருக்கிறது. இக்கால தலைமுறைக்கும்…
This website uses cookies.