ராணிப்பேட்டை ; பாம்பை வாயில் கடித்து துப்பி வீடியோ பதிவிட்டு சமூக வலைதளத்தில் பதிவேற்றிய இளைஞர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரக்கோணம் அருகே உள்ள சின்னகைனூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மோகன்(33), சூர்யா(21) மற்றும் சந்தோஷ்(21). இந்த மூவரும் கடந்த மாதம் 15ம் தேதியன்று அவர்களது குடியிருப்பு பகுதிக்கு அருகே வந்த தண்ணீர் பாம்பு ஒன்றை கையில் பிடித்துள்ளனர். அதோடு நிற்காமல் பாம்பை வாயால் கடித்து இரு துண்டாக்கி அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
வீடியோ வைரலான நிலையில், சென்னை வனத்துறை அலுவலகத்திலிருந்து கிடைத்த தகவலின் பேரில், இந்த கொடூர செயலில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களையும் கைது செய்த ஆற்காடு வனச்சரகர் சரவணபாபு தலைமையிலான வனத்துறை போலீசார், அவர்கள் மீது வனவிலங்குகளை துன்புறுத்துதல், வீடியோ பதிவேற்றம் செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தனர்.
விஜய் டிவியில் பாப்புலரான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் பவித்ரா லட்சுமி. இவர் நாய் சேகர் உள்ளிட்ட…
பிக்பாஸ் ஜோடி பிரபல சின்னத்திரை நட்சத்திரமான பாவனி “பிக் பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டபோதுதான் முதன்முதலாக அமீரை…
இழப்பீடு கேட்ட இளையராஜா ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் ஆங்காங்கே பல காட்சிகளில்…
சேலத்தில் பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, செந்தில் பாலாஜியின் செய்தியை திசை…
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை…
காஷ்மீர் பகல்காமில் தீவிரவாதிகள் தாக்குதலில் 28 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பள்ளத்தாக்கில் சுற்றுலா…
This website uses cookies.