Categories: தமிழகம்

வீட்டிற்குள் தாழிட்டு தீ வைத்துக்கொண்ட இளைஞர்… திருப்பூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

திருப்பூர் வெள்ளகோவில் பகுதியில் சேர்ந்தவர் தெய்வசிகாமணி யசோதா தம்பதியினர் இவர்களுக்கு கோகுல் (29) தினேஷ் (20) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வாகன விபத்து ஒன்றில் பாலசுப்பிரமணியம் இறந்துவிட்டார். மேலும் கடந்த ஆண்டு யசோதா உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார்.

இதனால் ஆதரவற்ற நிலையில் இருந்த கோகுல், தினேஷ் ஆகியோரை அவர்களது பாட்டி வள்ளியம்மாள் குமார் நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கவனித்து வந்தார். பெற்றோர் இறந்த நிலையில் கோகுல் தினேஷ் ஆகிய இருவரும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர்.

இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறும் நடந்து வந்துள்ளது. இதில் அவர்கள் தங்கி இருந்த வீட்டை அவ்வப்போது சேதப்படுத்தி வந்துள்ளனர்.


இந்த நிலையில் இன்று மதியம் வள்ளியம்மாள் அருகிலுள்ள கோவிலுக்கு சென்ற நிலையில் கோகுல் தினேஷ் ஆகிய இருவருக்குள் மீண்டும் சண்டை ஏற்பட்டது. அப்போது தினேஷ் கோகுலை அடித்து விரட்டி விட்டு வீட்டிற்கு உள்ளே சென்று கதவை பூட்டி வீட்டுக்கு தீ வைத்துள்ளார்.

இதைப் பார்த்த கோகுல் சத்தம் போட்டு உள்ளார். மேலும் தீ பற்றி எரிவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அனைத்து வீட்டிற்குள் இருந்த தினேஷை மீட்டனர். பெற்றோர் இறந்த சோகத்தில் மன உளைச்சலில் என்ன செய்வதென்று அறியாமல் வீட்டுக்கு தீ வைத்ததாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஜிவி தமிழ் சினிமாவின் பொக்கிஷம்…அனிருத் தாக்கப்பட்டாரா..பிரபல தயாரிப்பாளர் பேச்சு.!

கிங்ஸ்டன் பட விழாவில் எஸ் தாணு பேச்சு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது பல படங்களில்…

5 hours ago

அந்த ஐட்டம் பாடலை நான் பாடி இருக்கக்கூடாது..ஓபனாக பேசிய ஷ்ரேயா கோஷல்.!

பீல் பண்ண ஷ்ரேயா கோஷல் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியாக இருப்பவர் ஷ்ரேயா கோஷல்,இவர் ஹிந்தி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ்,தெலுங்கு,மலையாளம்…

6 hours ago

நான் யாருனு காட்டுறேன்…நெருப்பை பற்றவைத்த ‘குட் பேட் அக்லி’ டீசர்.!

பட்டையை கிளப்பும் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி…

7 hours ago

ஆட்சியரின் முட்டாள்தனமான பேச்சுக்கு காரணமே முதலமைச்சர்தான்.. அண்ணாமலை கண்டனம்!

சீர்காழி குழந்தை பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர்…

8 hours ago

‘குட் பேட் அக்லி’ யுனிவர்ஸ் படமா…அதை நீங்க கவனிச்சீங்களா மாமே.!

குட் பேட் அக்லி என்ன கதை அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின்…

8 hours ago

உங்களை நம்பி தான் இருக்கேன்..தியேட்டர் ஓனர்களுக்கு ‘சப்தம்’ பட இயக்குனர் வைத்த கோரிக்கை.!

கங்குவா படத்தை போல் மாற்றி விடாதீர்கள்.! தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஈரம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள்…

9 hours ago

This website uses cookies.