தாயை பற்றி தவறாக பேசியதால் கொடூர கொலை.. அலுவலகத்தில் புகுந்து கொலை செய்த இளைஞர் : Permission தராததால் விபரீதம்!!

சென்னை வியாசர்பாடி கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த விவேக் என்பவருக்கு திருமணமாகி தேவ பிரியா என்ற மனைவியும் ஒன்றரை வயதில் மகளும் உள்ளனர்.

விவேக் எழும்பூர் பகுதியிலி உள்ள ஹாத்வே நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த வெள்ளியன்று காலை அலுவலகத்தில் பணியில் இருந்த விவேக்கை கத்தியுடன் நுழைந்த மர்மநபர் குத்திக் கொலை செய்து விட்டு தப்பியோட முயன்றார்.

அப்போது அலுவலகத்தில் இருந்தவர்கள் அவரை பிடிக்க முயன்ற போது அவர்களையும் கத்தியால் குத்தியதில் இருவர் காயமடைந்தனர். மாடி வழியாக தப்பி சென்றார். இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த எழும்பூர் போலீசார் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் உடல்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து திருவல்லிக்கேணி துணை ஆணையர் சேகர் தேஷ்முக் தலைமையில் போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

அப்போது, ஒரு கட்டிடத்தின் மாடியில் பதுங்கி இருந்த கொலையாளியை அவரது உறவினர் ஒருவரை வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்துவது போல அழைத்து சுற்றிவளைத்தனர்.

பின்னர் அவனிடம் இருந்து ஆயுதங்களை கைப்பற்றிய போலீசார், விசாரணையில் அவன் பைக்ரேசர் சந்தோஷ் என்பதும், கடந்த 4 மாதங்களாக விவேக்கிற்கு கீழ் நிலை ஊழியராக பணியாற்றியதும் தெரியவந்தது.

மேலம், கடந்த இரண்மு வாரங்களுக்கு முன்பு பைக் ரேஸ் மீதுள்ள ஆர்வம் காரணமாக சீக்கிரமாக வெளியே செல்ல வேண்டும் என விவேக்கிடம் சந்தோஷ் அனுமதி கேட்டுள்ளார்.

பணி முடிக்காமல் செல்ல வேண்டாம் என விவேக் எச்சரித்துள்ளார். மேலம் ஆபாசமாக சந்தோஷின் தாயையும் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு,சக ஊழியர்கள் இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளனர்.

தாயை திட்டியைதை தாங்காத சந்தோஷ், வெள்ளிக்கிழமை காலை வழக்கம் போல பணிக்கு வந்த போது, விவேக்கிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விவேக்கின் கழுத்தில் குத்தி உள்ளார். மேலும் தப்பிய விவேக்கை துரத்தி சென்று கொலை செய்துள்ளார் சந்தோஷ். மேலும் கஞ்சா போதையில் இந்த தாக்குதலை நடத்தியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

கைதி 2 ட்ராப்? அப்போ அவரும் அவுட்டா? முக்கிய பிரபலத்துடன் இணையும் கார்த்தி!

இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை:…

17 hours ago

வெறுப்பேற்ற கள்ளக்காதல் நாடகம்.. கணவரின் உயிரைப் பறிந்த CRPF வீரர்!

அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலில் இருந்த கணவரை வெறுப்பேற்ற வீடியோ கால் பேசி மனைவி வெறுப்பேற்றிய நிலையில், கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…

18 hours ago

சுற்றி வளைக்கும் பாஜக.. திக்குமுக்காடும் திமுக.. பட்ஜெட் மீது கடும் தாக்கு!

டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது என மாநில நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர்…

19 hours ago

முதலில் ஒருவர் அறிக்கை விடுகிறார்.. அடுத்து ED சொல்கிறது.. செந்தில் பாலாஜி அட்டாக் பேச்சு!

ED சோதனையை சட்ட ரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்வோம் என மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.…

20 hours ago

நடிகை சினேகாவுக்கு அரிய வகை நோய்.. தைரியத்தை பாராட்டும் பிரசன்னா!

நடிகை சினோக தனக்கான தனியிடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.…

20 hours ago

பில்டப் காட்டி சீன் போட்ட நயன்தாரா.. பதிலடி கொடுத்த 90களின் கனவுக்கன்னி!

நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்…

21 hours ago

This website uses cookies.