15 வயது சிறுமியை சீரழித்த இளைஞர்.. அறையில் தங்கவைத்து பல நாட்களாக பலாத்காரம் : 40 வருடம் சிறை விதித்த நீதிமன்றம்!

Author: Udayachandran RadhaKrishnan
17 ஆகஸ்ட் 2024, 4:38 மணி
Nager
Quick Share

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்,வடசேரி புதுகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சகாய அஜித் வயது (31) இவர் பத்தாம் வகுப்பு படித்த 15 வயது சிறுமியிடம் நண்பராக பழகியுள்ளார்.

பின்னர் பழக்கத்தை பயன்படுத்தி கொண்டு கடந்த 2016 ஆம் ஆண்டு சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் வேறு ஊருக்கு சென்றனர்.உடனே சகாய அஜித் சிறுமியை அங்கிருந்து கடத்தி வந்து தனது வீட்டின் மாடியில் அடைத்து வைத்து இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பிறகு சிறுமியை அடித்து உதைத்ததோடு வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தள்ளி கொலை முயற்சி செய்துள்ளார்.

இதை அறிந்த சகாய அஜித்தின் உறவுக்கார பெண் ஒருவர் அந்த சிறுமியை காப்பாற்றி அவருடைய உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பெயரில் கடந்த 2017 ஆம் ஆண்டு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த கண்மணி வழக்கு பதிவு செய்து சகாய அஜித்தை கைது செய்தார்.

இது தொடர்பான வழக்கு நாகர்கோவிலில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது வழக்கு விசாரித்த நீதிபதி சுந்தரய்யா சகாய அஜித்தை குற்றவாளி என அறிவித்தார்,

அப்போது சிறுமியை கடத்த்தியது, வீட்டுக்குள் அடைத்து வைத்தல், கொலை முயற்சி,போக்சோ சட்டம், பெண் படும் வன்கொடுமை சட்டம், உள்ளிட்ட குற்றங்களுக்காக 40 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 33,000 அபராதமும் விதித்து ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூபாய் 6 லட்சத்தை அரசு வழங்கவும் உத்தரவிட்டார்.

  • PK என்ன ஒரு தைரியம்… புதிய கட்சியை தொடங்கி மதுக்கடைகளை திறப்பேன் என பிரசாந்த் கிஷோர் வாக்குறுதி!
  • Views: - 343

    0

    0