Categories: தமிழகம்

ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகள் முன்பு தீக்குளித்த இளைஞர்.. கும்மிடிப்பூண்டியில் ஷாக் சம்பவம்!

கும்மிடிப்பூண்டி அடுத்த கோட்டைகரை பகுதியைச் சேர்ந்தவர் தினகரன் – கல்யாணி தம்பதியர். இந்த தம்பதியர் சுமார் மூன்று வயது இருக்கும் போது கடந்த 50 வருடங்களுக்கு முன் பர்மாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.

அதற்கான ஆதாரங்களை கல்யாணி இதுவரையில் பொக்கிஷமாக பாதுகாத்து வரும் நிலையில் கணவனை இழந்த கல்யாணி தனது இரண்டு மகன்களுடன் கும்மிடிப்பூண்டி அடுத்த கோட்டை கரை நேதாஜி நகர் 2 வது தெரு தெருவில் 50 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் கல்யாணியின் ஏழ்மையை அறிந்த ஒரு தம்பதியர் தனக்கு சொந்தமான ஒன்னரை சென்ட் நிலத்தை கொடுத்துவிட்டு சென்னைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கல்யாணியின் வீட்டின் பின்புறம் சிலர் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி வாழ்ந்து வருவதாகவும் அவர்களுக்கு சென்று வர இந்த இடத்தை கொடுக்குமாறும் மிரட்டல்கள் வந்ததாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து அதிகாரிகளிடம் புகார் மனுவும் வழங்கப்பட்டதாக தெரிகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்த வட்டாட்சியர் கண்ணன் இடத்தை நேரடியாக ஆய்வு செய்து அந்த இடம் பட்டா இடம் எனவே நீதிமன்றத்தை நாடி முறையாக தீர்வு பெறுமாறு இருதரப்புக்கும் எழுத்துப்பூர்வமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதே இடத்தை முறையாக ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கான கடிதம் கொடுத்துள்ளதாக கூறி வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் மின்வாரியத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தபோது கல்யாணியின் இளைய மகன் ராஜ்குமார் ஒரு வார காலம் அவகாசம் வழங்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தார்.

ஆனால் மின்வாரியத்துறையினர் அதிரடியாக வீட்டின் மின் இணைப்பை துண்டித்ததால் மன உளைச்சலுக்கு ஆளான ராஜ்குமார் வீட்டை பூட்டிக்கொண்டு உடலின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ பற்றியவாறு அதிகாரிகள் முன்னிலையில் தெருக்களில் அலறி ஓடினார்.

அவரை காவல்துறையினரும் தீயணைப்புத்துறையினரும் லாவகமாக மீட்டு குமிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால் ராஜகுமாரின் உடல் 50 சதவீதம் திக்காயம் அடைந்த நிலையில் சென்னை கே எம் சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மீண்டும் அதிர்ச்சி.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் ஆபாச வீடியோ லீக் : சிக்கிய ஆதாரம்?!

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…

26 minutes ago

பூகம்பமாய் வெடித்த ‘எம்புரான்’ சர்ச்சை..மன்னிப்பு கேட்ட மோகன்லால்..!

மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…

13 hours ago

சூர்யா வீட்டில் திடீர் விசேஷம்…படையெடுத்த பிரபலங்கள்..குஷியில் ஜோதிகா.!

பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…

14 hours ago

தோனி சிக்ஸர் ரொம்ப முக்கியமா..கோட்டை விடும் CSK..முன்னாள் வீரர் காட்டம்.!

CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…

15 hours ago

இது தானா..எதிர்பார்த்த நாளும் இதுதானா..நடிகை திரிஷா போட்டோ வைரல்..ரசிகர்கள் வாழ்த்து.!

த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…

16 hours ago

AK ‘God Bless U’ மாமே..அட்டகாசமாக வெளிவந்த Second லிரிக் வீடியோ.!

அனிருத் பாடிய 'God Bless U’ நடிகர் அஜித் குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்திலிருந்து இரண்டாவது பாடலாக…

17 hours ago

This website uses cookies.