ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே காமன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் கார்த்திக் (வயது 25).
இவர் கோவையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று சொந்த ஊரான காமன்கோட்டைக்கு வந்த இவரிடம் 100 ரூபாய் ஜெராக்ஸ் நோட்டுகள் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சத்திரக்குடி இன்ஸ்பெக்டர் மணியன் தலைமையிலான போலீசார் கார்த்திக் வீட்டை சோதனையிட்டனர்.
மேலும் படிக்க: கல்லூரி மாணவியை காரில் அழைத்துச் சென்று மிரட்டி பாலியல் தொல்லை… சுதாரித்த மாணவி : சிக்கிய இளைஞர்!
அப்போது 78 A4 பேப்பர்களில் ஒவ்வொன்றிலும் தலா 4 வீதம் 100 ரூபாய் நோட்டுகள் இருந்த 312 ஜெராக்ஸ் நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் பேப்பரை வெட்டிய நிலையில் நான்கு உதிரி தாள்கள் என ரூபாய் 31,600 ஜெராக்ஸ் நோட்டுகள் இருந்தது.
கள்ள நோட்டுகளை புழக்கத்தில் வடுவதற்காக ஜெராக்ஸ் எடுத்து வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
ஏ4 பேப்பரில் 100 ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து வைத்திருந்த கார்த்திக் என்ற இளைஞரை சத்திரக்குடி போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில் மாபெரும் ஊழலை செல்வப்பெருந்தகை அரங்கேற்றியிருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். சென்னை:…
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…
தம்பி ராமையாவின் உருக்கமான கருத்து தமிழ் திரைப்பட உலகில் தனித்துவமான பணியைச் செய்து வந்த நடிகரும்,இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா,திடீர் மரணமடைந்த…
கோவையின் மதுக்கரை அடுத்த பகுதியில் ஆட்டைக் கொன்ற சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர்: கோவை…
’வருங்கால CM’ என தவெக பொதுச் செயலாளர் பெயரைக் குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டருக்கு புஸ்ஸி ஆனந்த், ECR சரவணன் விளக்கம்…
சென்னையில், இன்று (மார்ச் 28) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 105 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 340…
This website uses cookies.