Categories: தமிழகம்

இறுதி அஞ்சலிக்காக சென்ற இளைஞர் பலி… உடல் வைக்கப்பட்ட ப்ரீசர் பெட்டியில் இருந்து பாய்ந்த மின்சாரம்.. விசாரணையில் ஷாக்!!

திருவொற்றியூரில் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக கூறப்பட்ட மாணவியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த குளிர்சாதனப் பெட்டியில் இருந்து மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார்.

சென்னை திருவொற்றியூர் ராஜா கடை திருச்சினாங்குப்பம் சாலையை சேர்ந்த அபிநயா என்ற 16 வயது சிறுமி சென்னை காசிமேட்டில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1படித்து வந்தார்.

இவர் கடந்த சில நாட்களாக காதுவலியால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.
இந்நிலையில், சிகிச்சை பெற்ற அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அபிநயா அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தனியார் மருத்துவமனையில் அளித்த தவறான சிகிச்சை காரணமாகதான் அபிநயா உயிரிழந்தார் என்றும், தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாணவியின் உறவினர்கள் திருவொற்றியூர் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து போலீஸார் பேச்சுவார்த்தை மூலம் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று மாணவியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் உடலை வீட்டுக்கு கொண்டுவந்த குளிர்சாதன பெட்டியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது அருகில் மாணவியின் உறவினர்கள் சோகத்தில் அழுது கொண்டிருந்தனர்.

இந்நிலையில், அபிநயா உடல் வைக்கப்பட்டிருந்த குளிர் சாதன பெட்டியில் இருந்து திடீரென மின்சாரம் பாய்ந்தது. அப்போது அருகில் இருந்த அபிநயாவின் உறவினர்கள் மீது மின்சாரம் பாய்ந்ததில், காசிமேட்டை சேர்ந்த அஜித் (வயது 19) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், 2 பெண்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அயோக்கியத்தனம்.. இதுதான் போலீஸ் ஸ்டேஷன் லட்சணமா? போனில் வெளுத்து வாங்கிய டிஐஜி வருண்குமார்!

அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…

33 minutes ago

AK 64- திரும்பவும் ஆதிக் ரவிச்சந்திரனோடயா? குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற Hint!

ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…

46 minutes ago

உச்சக்கட்ட சந்தோஷத்தில் அஜித்… திக்குமுக்காடிய ஆதிக் : GBU கொடுத்த சர்ப்ரைஸ்!

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளியானது. ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி அத்தனை அம்சங்களும் படத்தில் உள்ளதால் ரசிகர்கள்…

56 minutes ago

என்னைய தவிர எல்லாத்துக்கும் நேஷனல் அவார்டு- வெற்றிமாறனுக்கு சங்கடத்தை ஏற்படுத்திய நடிகை…

தேசிய விருதுகளை குவித்த திரைப்படம்… வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆடுகளம்”. மிகவும்…

2 hours ago

என் மேல நம்பிக்கை வச்சதுக்கு மிக்க நன்றி அஜித் சார்- அர்ஜுன் தாஸ் உருக்கம்

வெளியானது குட் பேட் அக்லி… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம்…

3 hours ago

‘இனி நம்மல யாருமே பிரிக்க முடியாது’.. தண்டவாளத்தில் கட்டி அணைத்தவாறு தற்கொலை செய்த காதல் தம்பதி!

வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள…

3 hours ago

This website uses cookies.