கோவை : பொள்ளாச்சி அருகே அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் நகை, பணம் துணிகர கொள்ளை சம்பவம் தொடர்பாக தனிப் படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவர் பொள்ளாச்சியை அடுத்த நஞ்சேகவுண்டன் புதூரில் குடும்பத்துடன் தங்கி, தொப்பம்பட்டியில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இவரது மகள் பூப்பெய்ததற்கான நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனியில் நடைபெற்றது. இதற்கென சரவணகுமார் தனது மனைவி ஜெயச்சந்திரா, மகள் மற்றும் உறவினர்களுடன் பழனிக்கு சென்றார். அது சமயம் வீட்டைப் பார்த்துக்கொள்ள தஞ்சாவூர் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரை வீட்டுக் காவலுக்கு பணியமர்த்திவிட்டுச் சென்றார்.
நேற்று முன்தினம் இரவு மழை பெய்ததால் காவலாளி கோவிந்தராஜ் அருகே புதிதாக கட்டப்படும் கட்டிடத்தில் படுத்து தூங்கியுள்ளார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது சரவணகுமார் வீட்டின் கதவுகள் கடப்பாறையால் நெம்பப்பட்டு கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
தகவலறிந்து சரவணகுமார் வந்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த சுமார் 50 பவுன் நகை, ரொக்கம் ரூ. 72 லட்சம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக சரவணகுமார் கொடுத்த புகாரின் பேரில் வடக்கிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.