தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுக நேரி அருகே உள்ள தொழிற்சாலை ஒன்றில் இருந்து ஆசிட் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி கடலூர் நோக்கி கடந்த 6 ம் தேதி சென்று கொண்டிருந்தது.
நள்ளிரவில் மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே சென்ற போது டிரைவருக்கு தூக்கம் வரவே அங்குள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே லாரியை நிறுத்திவிட்டு தூங்கிவிட்டார்.
சிறிது நேரம் கழித்து எழுந்து பார்த்தபோது லாரியின் டீசல் டேங்க் உடைக்கப்பட்டு அதிலிருந்து சுமார் 400 லிட்டர் வரை டீசல் திருடப்பட்டு இருப்பதாக டிரைவர் இசக்கிமுத்து கூறியதோடு இது சம்பந்தமாக துவரங்குறிச்சி போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுடன் பெட்ரோல் பங்கில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்தாலே குற்றவாளிகளை எளிதில் கண்டறிய முடியும் என்ற நிலையில் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் உணவுக்கு கூட வழியின்றி தான் தவிப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் .
இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.