தேனி நகராட்சியின் அலட்சியத்தால் கழிவு நீர் கால்வாயில் தவறி விழுந்த சிறுமியை உரிய நேரத்தில் கால்வாயில் குதித்து மீட்ட பொதுமக்களின் செயல் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
தேனி பங்களாமேடு பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் அருகே கீர்த்தனா என்கிற நான்கு வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த சிறுமி கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்தது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் கத்தி கூச்சலிட்டு சிறுமியை மீட்க முயற்சி செய்தனர். அப்போது அருகில் இருந்த இளைஞர்கள் சிலர் ஓடிவந்து கழிவு நீர் கால்வாயில் மூழ்கிய சிறுமியை துரிதமாக செயல்பட்டு மீட்டெடுத்து சிறுமியின் உயிரை காப்பாற்றினர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன் சிசிடிவி காட்சி வெளியாகி தற்போது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
தேனி நகரின் கொட்டக்குடி ஆற்றில் இருந்து பழைய பேருந்து நிலையம் வழியாக செல்லப்படும் ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டுள்ள நிலையில், அதனை அகற்றி முறையாக தூர்வாரப்படாததால் கழிவு நீர் கால்வாயாக மாறி பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், முறையாக தடுப்புச் சுவர் ஏற்படுத்தாமல் இருப்பதால் சிறுவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக விளங்கி வருகிறது.
இது குறித்து தேனி நகராட்சி நிர்வாகத்தினரிடம் பல ஆண்டுகளாக புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நகராட்சியின் அலட்சியத்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாகவும், மேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் நகராட்சி நிர்வாகத்தினர் ஆக்கிரமிப்புகளை அகற்றி வாய்க்காலை முறையாக தூர்வாரி தடுப்புச் சுவரை எடுப்ப வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்த செல்வராகவன் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன் பல படங்களை இயக்கி வெற்றிகண்டுள்ளார்,சமீப…
அரியலூரில் தவணைத் தொகை வசூலிக்கச் சென்ற பைனான்ஸ் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட எரிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…
This website uses cookies.