தேனி மாவட்டம் அருகே அரிக்கொம்பன் யானை தாக்கியதில் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள கம்பம் நகர் பகுதிக்குள் கடந்த 27ஆம் தேதி அரிக்கொம்பன் யானை திடீரென நகர் பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த பொதுமக்களை விரட்டி வாகனங்களை சேதப்படுத்தியது. இதனால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தலை தெறிக்க ஓடி சென்றனர். அப்போது, யானை துரத்தியதில் கம்பம் பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவர் யானை தாக்கியதில் படுகாயம் அடைந்தார்.
உடனடியாக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வரும் பால்ராஜ் யானை தாக்கியதில் தலை மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று நள்ளிரவு ஒரு மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பால்ராஜை வனத்துறை அமைச்சர் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி ஐம்பதாயிரம் நிதி உதவி வழங்கி இருந்தால் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் பத்திருக்கும் மேற்பட்டோரை கொன்று துரத்திய அரிக்கொம்பன் தமிழகத்தில் தற்போது முதல் உயிர் பலியை ஏற்படுத்தி இருப்பது தமிழக மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.