நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியின் 130-வது ஆண்டு விழா நடந்தது. இதில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது ஒரு மாணவியை மேடைக்கு அழைத்து தன்னிடம் கேள்வி கேட்க விரும்பினால் கேளுங்கள் என்று கூறினார்.
அதன்படி 2 பேரும் கேள்விகள் கேட்டனர். முதலில் மாணவி கேட்டபோது, நீங்கள் என்னை போன்று ஒரு பெண். கடுமையான முயற்சியால் சாதித்ததாக கூறினீர்கள். இதற்கு மேல் என்ன சவால்களை பெண்கள் சந்திக்க வேண்டும்?என்றார்.
இதற்கு ஆளுநர் தமிழிசை கூறுகையில், பெண் என்றாலே சவாலை சந்தித்து தான் ஆக வேண்டும். அதுவும் அரசியல் கட்சி தலைவராக இருந்தால் அதை விட அதிகமாக சந்திக்க வேண்டும். கடும் விமர்சனங்களையும் சந்திக்க வேண்டி உள்ளது.
என்னை பற்றி பல்வேறு விமர்சனங்களை கூறினார்கள். நான் எம்.பி.பி.எஸ். படித்துள்ளேன். நன்றாக பேசுவேன். கவிதை எழுதுவேன். நிர்வாகம் செய்வேன். ஆனால் இதை எல்லாம் யாரும் கூறவில்லை. நீ குட்டையாக இருக்கிறாய். கருப்பாக இருக்கிறாய். சுருட்டை முடியுடன் இருக்கிறாய் என்று தான் கூறினார்கள்.
நல்லதை யாரும் சொல்ல மாட்டார்கள். அடிக்க, அடிக்க எழும் பந்தை போல தன்னம்பிக்கையுடன் உயர வேண்டும். பெண்கள் என்றாலே விமர்சனங்கள் செய்வார்கள்.
எது இருந்தாலும் நாங்கள் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல. அரசியல் துறையாக இருந்தாலும் ஆண்களுக்கு நிகராக மட்டும் அல்லாமல் ஆண்களுக்கு மேல் பணியாற்ற முடியும் என்பதை செயலின் மூலம் காட்ட வேண்டும் என்றார்.
இதைத் தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது புதுச்சேரியை தனி மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுப்பீர்களா? என்று கேட்கிறீர்கள். நான் அதற்கு பதில் கூற இயலாது. அதுதொடர்பான கோரிக்கை அங்கு உள்ளது.
ஆனால் அதில் முடிவு எடுக்கும் நிலையில் நான் இல்லை. புதுச்சேரியில் கவர்னராக சிறப்பாக பணியாற்றி வருகிறேன். முதலமைச்சர் ரங்கசாமியுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன்.
நிறைய நல்ல திட்டங்களை கொண்டு வருகிறோம். தமிழக அரசு ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை மீண்டும் கொண்டு வந்து இருப்பதாக கேட்கிறீர்கள். ஆனால் இதுதொடர்பாக தமிழக அரசிடமும், கவர்னரிடமும் தான் கேட்க வேண்டும்” என்றார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.