Categories: தமிழகம்

சுதந்திரமே இல்லை.. அண்ணாமலை வந்தால் தான் எல்லாம் நடக்கும்.. பணியை ராஜினாமா செய்த காவலர் : வைரலாகும் வீடியோ!!

ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் முதன்மை காவலராக பணியாற்றி வரும் கார்த்திக் என்பவர் வேலையை ராஜினாமா செய்வதாக கூறி சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த வீடியோவில், சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகள் ஆகியும் இன்னும் சுதந்திரம் இல்லாமல் இந்த சமூகம் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும், இந்த தேசத்திற்காகவும், இந்த சமூகத்திற்காகவும் நான் புனிதமாக நேசிக்கும் இந்த காவல் பணியை 77வது சுதந்திர தினமான இன்று ராஜினாமா செய்வதாக தெரிவித்திருந்தார்.

மேலும் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் கொடுப்பதாக ஆடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.

இவரது இந்த வீடியோ மற்றும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக கேணிக்கரை காவல் நிலைய போலீசாரிடம் விசாரித்த போது, கார்த்திகேயனின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என புரியவில்லை, இன்று காலை வரை எல்லோரிடமும் சகஜமாகத்தான் பேசிக்கொண்டு இருந்தார்.

அவர் ராஜினாமா செய்யப் போகிறார் என்ற அறிகுறியே அவரிடம் தெரியவில்லை, உங்களைப் போல நாங்களும் அவரது வீடியோவை பார்த்துதான் அதிர்ச்சியில் உள்ளதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் கார்த்திக் ராஜினாமா கடிதத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரையிடம் கொடுப்பதற்காக அவரது அலுவலகத்திற்கு சென்ற நிலையில், முதலமைச்சர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை பார்வையிடுவதற்காக போலீஸ் சூப்பிரண்டு சென்றுள்ளதால், பின்னர் வருமாறு அங்கிருந்த காவலர்கள் திருப்பி அனுப்பியுள்ளனர்.

பா.ஜ.க மாவட்ட தலைவர் தரணிமுருகேசனை சந்தித்து தன்னை கட்சியில் இணைத்துக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். ஆனால், வேலையை ராஜினாமா செய்வதாக எடுத்த முடிவு தவறானது. இப்போதைய காலகட்டத்தில் வேலை கிடைப்பதே அரிதாக உள்ளது.

கட்சியில் இணைந்து தான் சமூகப் பொறுப்பாற்ற வேண்டும் என்று இல்லை. நீங்கள் செய்யும் வேலையிலேயே சமூக பொறுப்புடன் பணியாற்றுங்கள் என தரணிமுருகேசன் அறிவுரை கூறி கார்த்திகேயனை திருப்பி அனுப்பினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?

நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…

9 hours ago

தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?

கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…

10 hours ago

அதிமுகவிடம் கணிசமான தொகுதிகளை கேளுங்க.. மேலிடத்துக்கு HINT கொடுத்த அண்ணாமலை!

தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…

11 hours ago

காணாம போய்ட்டேன்; தனியா போராடிட்டு இருக்கேன்- அதிர்ச்சியை கிளப்பிய நஸ்ரியா!

கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…

12 hours ago

நான் மட்டும் பொண்ணா பொறந்திருந்தா? கமல்ஹாசனை பற்றி பேசி ட்ரோலுக்குள்ளான சூப்பர் ஸ்டார்

உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…

13 hours ago

காதல் திருமணம் செய்த மகள் கொடூர கொலை… பெற்றோர் அரங்கேற்றிய நாடகம்!

ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…

13 hours ago

This website uses cookies.