சாக்கடை,சாலை வசதிகள் இல்லாததால், வீட்டிற்குள் மழை நீர் தேங்கியதால் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட குனியமுத்தூர் அம்மன் கோவில் பகுதியில் 5000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
குனியமுத்தூர் 87 ஆவது வார்டில், நேற்று பெய்த கன மழையின் காரணமாக சாக்கடை வசதிகள் இல்லாததால், மழைநீர் , சாக்கடை நீரோடு சேர்ந்து வீடுகளுக்குள் புகுந்துள்ளது.
குறிஞ்சி நகர் , எஸ்.என்.ஆர். கார்டன், வசந்தம் கார்டன், மாகாராஜா காலனி பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வரும் நிலையில், தேங்கிய மழை நீர் வடிகால் வசதி இல்லாததால், மூன்று மாதத்திற்கு மேல் வடியாமல் அப்படியே இருக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மேலும் கடந்த மாதம் தான் மாநகராட்சி ஆணையர், மேயர் , கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் ஆய்வு செய்து, மழை நீர் தேங்குவதை தவிர்க்க தற்காலிகமாக நடவடிக்கை எடுத்திருந்தனர்.
தற்போது பெய்த மழையால் மீண்டும் தண்ணீர் வீட்டுக்குள் புகுந்ததை கண்டித்து 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குனியமுத்தூர் வாகப் பெட்ரோல் பங்க் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்காலிக தீர்வு வேண்டாம் , நிரந்திர தீர்வு அளிக்குமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.