Categories: தமிழகம்

தமிழ்நாட்டை சேர்ந்த ஒருத்தர் கூட இல்லை, கேவலமா இருக்கு : கொதித்து பேசிய அன்புமணி ராமதாஸ்!!

என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, தமிழ்நாடு அரசு ஒருபக்கம் விவசாயத்திற்கு தனியாக பட்ஜெட் போடுகிறார்கள்… மறுபக்கம் விவசாயிகளை அச்சுறுத்தி துன்புறுத்தில் காவல்துறையை வைத்து நிலங்களை பிடுங்கி அதை என்.எல்.சி. நிர்வாகத்திடம் ஒப்படைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாடு அரசின் விவசாய எதிரான போக்கை கண்டிக்கின்றோம். இது நெய்வேலியை சார்ந்த என்.எல்.சி. பிரச்சினை கிடையாது. என்.எல்.சி.யால் 5 மாவட்டத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதை தடுக்க வேண்டும் என்ற நோக்கில் தான் என்.எல்.சி-யை எதிர்த்து பாமக தொடர்ந்து போராடி வருகிறது.

என்.எல்.சி வருவதற்கு முன் 8 அடியில் இருந்த நிலத்தடி நீர் தற்போது 1,000 அடிக்கு சென்றுவிட்டது. இதற்கு முழு காரணம் என்.எல்.சி. 10 ஆயிரம் ஏக்கம் நிலம் இன்று என்.எல்.சி.யிடம் உள்ளது. அந்த 10 ஆயிரம் ஏக்கர் நிலத்திலே இன்று பழுப்பு நிலக்கரியை எடுத்தால் அடுத்த 30 ஆண்டுகளுக்கு நிலக்கரி எடுக்கலாம்.

மத்திய அரசு என்.எல்.சி நிர்வாகத்தை 2025-க்கும் தனியாரிடம் விற்கப்போகிறோம் என்று நாடாளுமன்றத்தில் கூறியுள்ளனர். நாடாளுமன்றத்தில் ஒன்று கூறினால் அது 100 சதவிகிதம் உண்மையாகத்தான் இருக்கும்.

அடுத்த ஆண்டிற்குள் என்.எல்.சி.யை தனியாரிடம் விற்கப்போகிறோம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 1 ஆண்டுக்குள் என்.எல்.சி.யை விற்க உள்ள மத்திய அரசுக்கு மாநில திமுக அரசு எதற்கு மக்களை அச்சுறுத்தி, துன்புறுத்தி நிலங்களை கையகப்படுத்திகொடுக்கிறது.

அங்கே இருக்கின்ற மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதில்லை. நிலம் கொடுத்தவர்களுக்கு இன்னும் வேலை கொடுக்கவில்லை. 37 ஆயிரம் ஏக்கர் நிலம் கொடுத்த மக்களுக்கு மொத்தத்தில் 1,800 பேருக்கு தான் வேலை கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த 1,800 பேரில் அனைவரும் தற்போது வேலையில் இல்லை. அனைவரும் ஓய்வு பெற்றுவிட்டனர். தற்காலிகமாக சுமார் 3 ஆயிரம் பேருக்கு வேலை கொடுத்துள்ளனர்.

என்எல்சி சமீபத்தில் 297 பேர் ஜூனியர் இன்ஜினியர் வேலையில் எடுத்தனர். அதில் ஒரு நபர் கூட தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் கிடையாது. வேலையும் கொடுப்பதில்லை… வாழ்வாதாரத்தை அழிக்கிறது. நிலத்தடி நீர், விவசாயத்தை ஒழித்துவிட்டனர். இதனால் ஒட்டுமொத்த மாவட்டத்திற்கும் பாதிப்பு. அதனால் தான் என்.எல்.சி.யை பாமக எதிர்க்கிறது’ என்றார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஸ்மார்ட் மீட்டரில் மிகப்பெரிய ஊழல்? ஆதாரங்களுடன் தயாராகும் அண்ணாமலை!

தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…

22 minutes ago

ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்

ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…

50 minutes ago

கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?

வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…

2 hours ago

இணையத்தில் வெளியானது GOOD BAD UGLY… அதுவும் HD PRINT : பரபரப்பில் படக்குழு!

அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…

2 hours ago

அயோக்கியத்தனம்.. இதுதான் போலீஸ் ஸ்டேஷன் லட்சணமா? போனில் வெளுத்து வாங்கிய டிஐஜி வருண்குமார்!

அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…

3 hours ago

AK 64- திரும்பவும் ஆதிக் ரவிச்சந்திரனோடயா? குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற Hint!

ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…

4 hours ago

This website uses cookies.