Categories: தமிழகம்

இதுக்கு ஒரு முடிவே இல்லையா? உயிர் பலி வாங்கும் நீர்நிலைகள் : காவிரி ஆற்றில் குளிக்க சென்ற சிறுமிகள் நீரில் மூழ்கி பலியான பரிதாபம்!!

சேலம் : தமிழகத்தில் நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வரும் நிலையில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த 5ஆம் தேதி கடலூர் கெடிலம் ஆற்றில் சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் என 8 பேர் குளிக்க சென்றுள்ளனர். இதில் 7 பேர் மட்டும் கெடிலம் ஆற்றில் இறங்கி குளித்ததாக கூறப்படுகிறது.

அப்போது அவர்களில் சிலர் எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு நீந்தி சென்றுள்ளனர். ஆனால் மீண்டும் கரைக்கு திரும்ப முடியாமல் அவர்கள் தத்தளித்தபடி அலறி கூச்சலிட்டனர்.

இதை கேட்டு துடித்துப்போன மக்கள் ஓடி வந்து நீரில் மூழ்கிய 7 பேரையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும் மணல் கொள்ளை காரணமாகவே இந்த சம்பவம் நிகழ்ந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர்.

இதே போல நேற்று தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் பாப்பன்பட்டி கண்மாயில் குளிக்க சென்ற இளைஞருடன் 3 சிறுவர்கள் சென்றனர். அப்போது மூன்று சிறுவர்களும் ஆழமான பகதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கினர்.

இதையடுத்து இளைஞர் பன்னீர்செல்வம் அவர்களை காப்பாற்ற ஆற்றில் குதித்துள்ளார். அதில் அந்த இளைஞர் உட்பட 2 சிறுவர்களும் உயிரிழந்தனர். 7 வயது சிறுவன் மட்டும் காப்பாற்றப்பட்டுள்ளார்.

இந்த சம்பவங்கள் நடந்து மக்கள் இன்னும் ஆசுவாசப்படுத்தாத நிலையில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள சேத்துக்குளியை சேர்ந்த முருகேசனின் மகள் காமாச்சி மற்றும் அவரது தம்பி மக்ள் பவித்ரா ஆகியோர் சேத்துக்குளியில் உள்ள பாட்டி வீட்டிற்கு பள்ளி விடுமுறை காரணமாக வந்திருந்தனர்.

அப்போது பாட்டி பாப்பாத்தி துணி துவைக்க காவிரி ஆறுக்கு சென்றார். அவருடன் சிறுமிகளும் சென்றனர். அப்போது சிறுமிகள் ஆற்றில் குளிக்க சென்றனர். ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கியதில் மூச்சுத்திணறி சிறுமிகள் இருவரும் உயிரிழந்தனர்.

தகவலறிந்து வந்த அக்கம்பக்கத்தினர் சிறுமிகளின் சடலங்களை மீட்ட நிலையில் இது குறித்து கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

1 hour ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

2 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

2 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

2 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

3 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

3 hours ago

This website uses cookies.