தருமபுரி நகராட்சி 33 வார்டுகளை கொண்டது. இதில், 20 வார்டுகள் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளும் 13 வார்டுகளில் அதிமுக கவுன்சிலர்கள் உள்ளனர். இதில், நகராட்சி சேர்மனாக திமுகவை சேர்ந்த லட்சுமி, துணை சேர்மனாக நித்யா, ஆகியோர் உள்ளனர். இதில், துணை சேர்மன் நித்யாவிற்கு நகர மன்ற கூட்டத்தில் உரிய இருக்கை வழங்காமல் மற்ற கவுன்சிலர்கள் இருக்கைகளைத் தாண்டி கடைசியில் ஒரு ஓரமாக வழங்கப்படுவதாக கடந்த ஓராண்டாக முரண்பாடு இருந்து வந்தது.
மேலும், திமுகவைச் சேர்ந்த சேர்மன் லட்சுமி சக கட்சியை சேர்ந்த உறுப்பினர்களுக்கும் துணைச்சேர்மனுக்கு மரியாதை கொடுப்பதில்லை என அவ்வப்போது குற்றச்சாட்டு எழந்தது. இந்த நிலையில், நகராட்சி அலுவலகத்தில் சாதாரண கூட்டம் இன்று நடந்தது. இதில், கூட்டத்திற்கு வந்த துணை சேர்மன் நித்யா உடனடியாக நகர மன்ற கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து, அவரிடம் கேட்டபோது நகராட்சி கூட்டத்தில் துணைச் சேர்மன் என்ற வகையில் எனக்கு மரியாதை கொடுப்பதில்லை. மேலும் எனக்காக ஒதுக்கப்பட்டும் இருக்கையில் சேர்மனின் கணவர் அமர்ந்து கொள்கிறார். ஒரு வருடமாக இதனை சேர்மனிடம் முறையிட்டும் இதுவரை கண்டு கொள்ளவில்லை. மேலும், அனைவரின் முதுகுக்கு பின்னால் என்னை அமர வைத்துள்ளனர். இதனால், வேறு வழியின்றி அவர்கள் நடவடிக்கையை கண்டித்து நான் வெளி நடப்பு செய்கிறேன்.
இருக்கைகள் அமைக்காதது குறித்து கேட்டால் சேர்மன் லட்சுமியின் கணவர் என்னை மிரட்டுகிறார். மேலும் தருமபுரி நகராட்சி அலுவலகம் போல் இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து அலுவலகம் போல தான் செயல்படுகிறது என்று கூறினார். தருமபுரி நகராட்சியின் நகர மன்ற கூட்டத்தில் திமுகவின் அராஜக போக்கை கண்டித்து திமுக வின் நகர மன்ற துணைத் தலைவரே திமுக தலைவரின் செயலை கண்டித்து வெளிநடப்பு செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.