தாம்பரம் அருகே ஜி.எஸ்.டி சாலையில் சென்று கொண்டிருந்த அரசு குளிர்சாதன பஸ்சின் மேற்கூரையில் இருந்து புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை பிராட்வேயில் இருந்து தாம்பரம் நோக்கி அரசு குளிர்சாதன பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த பஸ் தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே வந்த போது திடீரென பஸ்சின் மேற்கூரையில் இருந்து புகை கிளம்பியது.
இதை அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் புகை கிளம்புவதாக கூச்சலிட்டனர். இதைக் கவனித்த பஸ் டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்திவிட்டு பயணிகள் அனைவரையும் கிழே இறங்குமாறு அறிவுறுத்தினர்.
பஸ்சின் மேற்கூரையில் புகை கிளம்பும் தகவல் அறிந்ததும் பயணிகளும் அச்சத்தில் அவசர அவசரமாக பஸ்சை விட்டு இறங்கினர். இதனால், அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
பின்னர், பொதுமக்கள் உதவியுடன் தண்ணீர் ஊற்றி புகை அணைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால், எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.