விருதுநகர் : ரயில் முன்பு விழுந்து காதலி உயிரிழந்ததை அறிந்த காதலன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சித்த நிலையில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக எழுதிய கடிதத்தை வாட்ஸ் ஆப்பில் வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் அருகே உள்ள ராமசாமிபுரத்தை சேர்ந்த சோலைமீனா (வயது 20) என்பவர் விருதுநகர் தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவரும் விருதுநகர் பரங்கிநாதபுரம் தெருவைச் சார்ந்த பிரவின் குமார் (வயது 28) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு மருத்துவமனைக்கு பணிக்கு சென்ற சோலை மீனா காலை பட்டம்புத்தூர் அருகே ரயில் தண்டவாளத்தில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தற்கொலை செய்து கொண்ட சில மணி நேரங்களிலேயே அவருடைய காதலன் பிரவீன் குமார் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும், எதங்களின் தற்கொலைக்கு சோலை மீனா உடன் பணிபுரியும் புவனா, ஸ்டீபன் ராஜ் மற்றும் அர்ச்சனா ஆகியோர் தான் காரணம் எனக்கூறி கடிதம் எழுதிய பிரவீன் குமார் அதை தனது வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தன் காதலி சோலை மீனா போலவே ரயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
ஆனால் தலையில் பலத்த காயம் அடைந்த பிரவீன்குமார் விருதுநகர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளார்
சோலை மீனா தற்கொலை செய்தது குறித்து, காதலன் பிரவீன் குமார் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் உண்மை என்ன என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.