Categories: தமிழகம்

தனியாக வசிக்கும் மூதாட்டியை குறிவைத்த கொள்ளையர்கள் : நகைக்காக கோவையில் அரங்கேறிய பயங்கரம்..!!

கோவை : தனியாக இருக்கும் மூதாட்டியின் கை, கால்களை கட்டி போட்டு படுகொலை செய்து நகை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை அருகே உள்ள சிந்தாமணி புதூர், காந்திநகர், திலகர் வீதியை சேர்ந்தவர் சின்னச்சாமி. இவரது மனைவி சரோஜினி ( வயது 82 )இவருக்கு 2மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அவர்கள் திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருகிறார்கள்.

சரோஜினியின் கணவர் 7ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் சரோஜினி சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவர் நேற்று மதியம் செல்வ லட்சுமிபுரத்தில் வசிக்கும் சரோஜினியின் மூத்த மகன் ரவிச்சந்திரனுக்கு செல்போனில் பேசினார்.

உங்கள் அம்மா காலையில் இருந்து வீட்டிற்கு வெளியே வரவில்லை. பால் பாக்கெட் இன்னும் எடுக்கப்படாமல் உள்ளதாக கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன் உடனடியாக தாய் சரோஜினி வீட்டிற்கு வந்தார்.

அவர் உள்ளே சென்று பார்த்த போது சரோஜினியின் கைகள், கால்கள் கட்டபட்டு வாய் பிளாஸ்டிக் டேப்பால் ஒட்டபட்டிருந்தது. உடனே அவர் அருகில் சென்று பார்த்த போது சரோஜினி பிணமாக கிடப்பது தெரியவந்தது.

இது குறித்து சூலூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். இதில் சரோஜினியை மர்ம நபர்கள் கை, கால்களை கட்டிப்போட்டு வாயை பிளாஸ்டிக் டேப்பால் ஒட்டி, கொலை செய்து விட்டு அவரது கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி, விரலில் அணிந்திருந்த மோதிரம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது.

இது குறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவு பேரில் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மூதாட்டியை கொலை செய்து நகைகள் கொள்ளை அடிக்கபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பாஜக முக்கியப் புள்ளி படுகொலை… நள்ளிரவில் பின்தொடர்ந்த கும்பல் வெறிச்செயல்!

புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…

27 minutes ago

நயன்தாரா இப்படிலாம் செய்வாங்கனு எதிர்பார்க்கல- உண்மையை போட்டுடைத்த சுந்தர் சி!

மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…

30 minutes ago

கணவர் வீட்டை விட்டு போக முடியாது : புதுச்சேரியை விட்டு செல்ல மறுக்கும் பாக்., பெண்!

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பஃவ்சியா பானு, (39). இவர், உறவினரான புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஹனிப்கான் (43) என்பவரை, கடந்த…

57 minutes ago

தேர்தல் நேரத்தில் ரூ.11 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.. திமுக எம்பிக்கு கோர்ட் பரபர உத்தரவு!

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…

1 hour ago

நடிகர் ஆர்யா மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்.. காசு வாங்கும் போது தெரியலையோ?

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…

2 hours ago

இளையராஜா செஞ்சது சரியா?- கெத்து தினேஷுக்கு இவ்வளவு கெத்தா? என்னப்பா இது?

இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…

2 hours ago