திருவள்ளூரில் 3-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் தலைமை ஆசிரியர் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு உட்பட்ட ஆஞ்சநேயர் நகரில் அரசு தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மொத்தம் 16 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக செங்கல்வராயன் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், தலைமை ஆசிரியர் செங்கல்வராயன், அப்பள்ளியில் 3-ம் வகுப்பு பயின்று வரும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாகத் தெரிகிறது. மேலும், இது குறித்து யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என்றும் அவர் அம்மாணவியிடம் கூறி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, பள்ளி முடிந்து சென்ற மாணவி, நடந்தவற்றை தனது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார். இதனையடுத்து மாணவியின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் வந்து முறையிட்டு உள்ளனர். ஆனால், அதற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் சரிவர பதில் அளிக்கவில்லை எனத் தெரிகிறது.
எனவே, இது தொடர்பாக மாணவி பேசிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதில் அம்மாணவி தனக்கு நேர்ந்த கொடூரத்தைக் கூற, அதற்கு தகுந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், எனவே தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப அச்சமாக உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதனால் 5 மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வந்து பயின்று செல்வதாகவும் கூறப்படுகிறது.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.