திருவள்ளூரில் 3-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் தலைமை ஆசிரியர் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு உட்பட்ட ஆஞ்சநேயர் நகரில் அரசு தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மொத்தம் 16 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக செங்கல்வராயன் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், தலைமை ஆசிரியர் செங்கல்வராயன், அப்பள்ளியில் 3-ம் வகுப்பு பயின்று வரும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாகத் தெரிகிறது. மேலும், இது குறித்து யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என்றும் அவர் அம்மாணவியிடம் கூறி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, பள்ளி முடிந்து சென்ற மாணவி, நடந்தவற்றை தனது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார். இதனையடுத்து மாணவியின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் வந்து முறையிட்டு உள்ளனர். ஆனால், அதற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் சரிவர பதில் அளிக்கவில்லை எனத் தெரிகிறது.
எனவே, இது தொடர்பாக மாணவி பேசிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதில் அம்மாணவி தனக்கு நேர்ந்த கொடூரத்தைக் கூற, அதற்கு தகுந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், எனவே தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப அச்சமாக உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதனால் 5 மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வந்து பயின்று செல்வதாகவும் கூறப்படுகிறது.
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
This website uses cookies.