திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து வழுக்கி விழுந்த அண்ணன் தம்பி இருவரை தூக்கிவிடச் சென்ற ஊர்க்காவலர்கள் 2 பேரை அடித்து, எட்டி உதைத்த போதை ஆசாமிகள். வைரலாக பரவும் வீடியோ
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகரப் பகுதியை சேர்ந்தவர்கள் ஊமையன் என்கிற விஜயன் (24) மற்றும் அவரது அண்ணன் தாமரைக்கண்ணன் (26). பூக்கடையில் வேலை செய்யும் இவர்கள் இருவரும், அண்ணா சிலை அருகே மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்துள்ளனர்.
மேலும் படிக்க: தூக்கத்தில் இருந்து எழுந்திருங்க…கூட்டணி கட்சி-னு பார்க்காமல் தமிழக உரிமையை காப்பாற்றுங்க ; இபிஎஸ் அழுத்தம்
மழை பெய்து ரோடு ஈரமாக இருந்த நிலையில், கூட்டத்தைக் கண்டு பிரேக் அடித்தபோது வழுக்கி விழுந்துள்ளனர். இதனைப் பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊர்க்காவல் படையைச் சேர்ந்த நரேந்திர அர்ஜுன், முகிலன் ஆகியோர் அவர்களை தூக்கி விட்டு உதவி செய்துள்ளனர். அப்போது, விஜயன் மற்றும் தாமரைக்கண்ணன் இருவரும், ஊர்க்காவல்படையினரை அடித்து காலால் உதைத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்து திருச்செங்கோடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
அண்ணன் தம்பி இருவரும் குடிபோதையில் இருந்ததாகவும், குடி போதையில் வேகமாக வாகனத்தை ஓட்டியது ஏன் என தட்டிக் கேட்டபோது வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டதாகவும், சம்பவத்தை பார்த்த சிலர் தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக கழக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையும்…
சர்ச்சைக்குள் சிக்கிய எம்புரான் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள “எம்புரான்” திரைப்படம் கடந்த மாத இறுதியில் வெளியான நிலையில் ரசிகர்களின்…
தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்பட உள்ளார் என்ற செய்தி பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மேலிடம் எடுக்கும்…
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…
ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…
This website uses cookies.