எதிர்கட்சிகளின் விமர்சனத்துக்கு பதிலளிக்க வேண்டியது ஆளும் தரப்பின் கடன் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
விழுப்புரம்: வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் உருவான ஃபெஞ்சல் புயலால் முதலில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனையடுத்து, புயல் மாமல்லபுரம் – காரைக்கால் இடைப்பட்ட பகுதியில் கரையைக் கடந்தது.
இந்த நேரத்தில் விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்து, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாகப் பாதித்தது.
அது மட்டுமின்றி, திருவண்ணாமலை தீப மலை அடிவாரப் பகுதியான வ.உ.சி நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு குடும்பமே மறைந்த செய்தி தேசிய அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், நெடுஞ்சாலைகள், தென்பெண்ணை கரையோரப் பகுதி மக்கள் என ஃபெஞ்சல் புயல் விட்டுவைக்காத இடமே இல்லை.
இந்த நிலையில், ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் பாதிப்பு அறிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “எதிர்கட்சித் தலைவரின் அறிக்கைக்கு பதில் அளிப்பதில்லை” என்றார் ஸ்டாலின்.
இதனையடுத்து, இது தொடர்பாக ஸ்டாலினின் பதில் குறித்து பேசிய இபிஎஸ், நான் என் கடமையைத் தான் செய்கிறேன் என்றும் ஆனால், ஆளுங்கட்சியின் முதல்வர் அதற்கு உரிய பதில்களை அளிப்பதில்லை என்றும் கூறினார். இந்த நிலையில், ஆளும்கட்சி – எதிர்கட்சி ஆகியவற்றின் முரண்பாடு குறித்து விசிக தலைவர் திருமாவளவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதையும் படிங்க: ‘கடலூரில் கொஞ்சம் பாதிப்பு”.. சாத்தனூர் அணை ஏன் திறக்கப்பட்டது? அன்புமணி கேள்வியும், அமைச்சரின் பதிலும்!
அதற்கு, “எந்தப் பொருளில் அந்த கருத்தை அவர் (ஸ்டாலின்) சொன்னார் என்று நான் கவனிக்கவில்லை. எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்கும், அவர்களது கேள்விகளுக்கும் விடை அளிப்பது ஆளும் தரப்பின் கடன் என்பதை அனைவரும் அறிவோம். அது அவர்களுக்கு (திமுக – அதிமுக) இடையிலான அரசியல்” என திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக எம்பி திருமாவளவன் பதிலளித்தார்.
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
படப்பிடிப்பில் முன்னணி நடிகர் ஒருவர் போதையில் தன்னிடம் அத்துமீறியதாக பிரபல நடிகை பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். இதையும் படியுங்க: சண்ட போட்டு…
This website uses cookies.