அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரத்தில் யார் அந்த சார்? என்பது தொடர்பாக நேர்மையான விசாரணை தேவை என திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை: சென்னை விமான நிலையத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ,அண்ணா பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரத்தில் யார் அந்த சார்? என்பது தொடர்பாக நேர்மையான விசாரணை தேவை. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அவ்வப்போது நடக்கும் சூழலில், அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அவ்வப்போது தமிழக அரசுக்கு சுட்டிக்காட்டி உள்ளோம், வேண்டுகோள் விடுத்து இருக்கிறோம்.
அந்த வகையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி கைது செய்யப்பட்டிருந்தாலும் கூட, அந்த குற்றச்செயல் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் உருவாக்கி இருக்கிறது.
பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்க அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம். இந்த வழக்கைப் பொறுத்தவரையில் கைது செய்யப்பட்ட நபரைத் தாண்டி, ஒரு சிலர் அதில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்ற சந்தேகம் வலுவாக உள்ளது.
இதையும் படிங்க: ஆள விடுங்கடா சாமி…பொங்கல் ரேஸில் இருந்து ஓட்டம் பிடித்த வீர தீர சூரன்..!
எனவே, அரசு, குறிப்பாக காவல்துறை நேர்மையான முறையில் புலன் விசாரணை நடத்தி, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்ட நபருக்கு உடனடியாக பிணை வழங்கக் கூடாது. அவரைச் சிறையில் வைத்தே புலன் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கு விசாரணை முடித்து தண்டனை வழங்க வேண்டும் என்று விசிக வலியுறுத்துகிறது” எனத் தெரிவித்தார்.
சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.