வேங்கைவயலில் துக்க நிகழ்வில்கூட வெளியூர் உறவினர்கள் பங்கேற்க தடை விதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் எம்பியுமான திருமாவளவன், இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “வேங்கைவயலை தனித்தீவாக போலீசார் மாற்றி உள்ளனர்” என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்த குற்றச்சாட்டு பரபரப்புக்கு உள்ளான நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் கருப்பாயி என்ற மூதாட்டி உயிரிழந்த நிலையில், அவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்த வெளியூர் உறவினர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், உயிரிழந்த மூதாட்டியின் சடலத்தை சாலையில் வைத்து உறவினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது. அதேநேரம், உயிரிழந்த மூதாட்டி சிபிசிஐடி போலீசார் சுட்டிக்காட்டிய காவலர் முரளி ராஜாவின் பாட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “வேங்கைவயல் விவகாரத்தில் புலன் விசாரணையில் கிடைத்த ஆதாரம் என்ற அடிப்படையில் ஏற்கனவே வெளியிட்ட ஆடியோவைத் தான் வெளியிட்டனர்.
இதையும் படிங்க: அரசியல் அழுத்தமா? ஜனநாயகன் ரிலீஸ் ஆவதில் சிக்கல்.. அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்!
டிஎன்ஏ முடிவு அடிப்படையில் தான் இந்த முடிவுக்கு வந்தோம் எனக் கூறும் அவர்கள், அது குறித்து எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை. தாயும், மகனும் பேசிய பேச்சை ஆதாரமாகத் தருவது பெரும் அதிர்ச்சியையேத் தருகிறது. அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் அடிப்படையில்தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்” எனத் தெரிவித்திருந்தார்.
தோனி களமிறங்குவாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு.! ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்…
தங்கள் கட்சியை வளர்ப்பதற்காகவும், தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் விஜய் அவ்வாறு கூறியுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். சேலம்: சேலத்தில் இன்று அதிமுக சார்பாக…
பாலிவுட் நடிகை ஷாக் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" தொடரில் வித்யா எனும் கதாபாத்திரத்தின் தோழியாக நடித்து…
விழுப்புரம் அருகே, ஹெட்போன் போட்டுக் கொண்டு தண்டவாளம் அருகே அமர்ந்திருந்த இளைஞர் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம்,…
நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தர்ஷினியின் மரணத்திற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசே முழு பொறுப்பு என எடப்பாடி பழனிசாமி…
சென்னையில், இன்று (மார்ச் 29) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 20 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 360…
This website uses cookies.