திருப்பூர் : திருப்பூரில், தொழில் அதிபரை கடத்த முயன்ற வழக்கில் தொடர்புடைய மூன்று ரவுடிகள், அதிமுக பெண் பிரமுகர் உள்ளிட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
திருப்பூர் தென்னம்பாளையம், வேலன் நகர், ஆர்.வி.ஈ லே அவுட் பகுதியை சேர்ந்த பாபு (62)இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரிடம் இடம் வாங்குவது தொடர்பாக உள்ள பிரச்சினையில், ரியல்எஸ்டேட் தொழில் செய்யும் அதிமுக. மகளிர் அணி மாவட்ட துணை செயலாளர் செல்வி (47) என்பவரின் தூண்டுதலின் பேரில், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சுபாஷ் சந்திரபோஸ், ரவிக்குமார் மற்றும் கோபிநாத் உள்ளிட்ட நான்கு நபர்கள் நேற்று முன்தினம் பாபுவின் வீட்டிற்கு காரில் சென்று கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்து கடத்த முயற்சித்தனர்.
இதனிடையே பாபுவின் மனைவி கூச்சலிடவும், வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் பிடிக்க முயற்சித்ததால், காரில் அவர்கள் தப்பி சென்றுள்ளனர். இது தொடர்பாக பாபு அளித்த புகாரின் பேரில் திருப்பூர் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தனிப்படையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அஜய் (22),விக்னேஷ் (25)பாபுவை கடத்த கூறிய ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் செல்வி (47) அருண்குமார் (39), பினிஷ்குமார்(43) ஆகியோர் சேர்த்து மொத்தம் எட்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் சுபாஷ், ரவிக்குமார், கோபிநாத் உள்ளிட்டோர் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்ததுள்ளது.
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
நடனப்புயல் நடனப்புயல் எனவும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் அழைக்கப்படும் பிரபுதேவா, இந்தியாவின் தலை சிறந்த நடன அமைப்பாளர் ஆவார்.…
தேர்தலை எதிர்கொள்ளப்போகும் விஜய் தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில் நடிகர் விஜய்…
This website uses cookies.