திருப்பூர் – பல்லடம் அருகே ராயர்பாளைத்தில் விபத்தில் காயமடைந்த மகன்களை பார்க்க சென்ற தந்தையும், அதே இடத்தில் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
திருப்பூரை சேர்ந்த சகோதரர்கள் அருண்குமார்- சசிகுமார். இவர்களிருவரும் இரு சக்கர வாகனத்தில், இன்று காலை திருப்பூரிலிருந்து பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். பல்லடம் அருகே ராயர்பாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்த பொழுது, சகோதரர்கள் வந்த இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இத்தகவல் சகோதரர்களின் தந்தை பெத்தானுக்கு தெரிய வந்து, அவரும் இரு சக்கர வாகனத்தில் திருப்பூரிலிருந்து பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்த போது, அவரது மகன்களின் வாகனம் விபத்துக்குள்ளான ராயர்பாளையத்திலிருந்து சிறிது தூரம் தள்ளி, சாலையோரம் இருந்த குழி ஒன்றில் அவரது இரு சக்கர வாகனமும் இறங்கி விபத்துக்குள்ளானது.
இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதே பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு முன்பாக இதே இடத்தில் இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவி ஒருவர் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த சாலையோர குழியை சரி செய்ய பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. விபத்திற்குள்ளான பெத்தான் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
தயாராகி வரும் கொண்டாட்டங்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
திருச்சி நீதிமன்றத்தில் வருண் குமார் தொடுத்த வழக்கில் இன்று ஆஜராக வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் (வயது 8) சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்…
This website uses cookies.