திருப்பூர் : திருப்பூரில் அரசு பள்ளிகளில் மதமாற்றம் நடந்தது உண்மையா..? என்பது குறித்து நடத்தப்பட்ட விசாரணை குறித்த தகவலை ஆட்சியர் வினீத் வெளியிட்டுள்ளார்.
திருப்பூர் ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயிலும் மாணவியை ஆசிரியர் ஒருவர் மதமாற்ற முயற்சி செய்ததாக மாணவியின் பெற்றோர் மற்றும் இந்து முன்னணி சார்பில் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், ஆசிரியை மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி, இந்து இளைஞர் முன்னணி சார்பில் இரண்டு முறை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் வினீத், திருப்பூர் மாவட்டத்தில் எந்த ஒரு அரசு பள்ளிகளிலும் மதம் மாற்றம் தொடர்பான புகார் இல்லை எனவும், ஜெய்வாபாய் பள்ளியில் மதமாற்ற முயற்சித்ததாக வந்த புகாரில் உண்மையில்லை எனவும், பள்ளிக்கல்வித்துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் விசாரணை நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் பொய்யான தகவல்களை பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு பரிந்துரைத்து இருப்பதாகவும், திருப்பூர் மாவட்டத்தில் ஏதேனும் பள்ளிகளில் இதுபோல் புகார்கள் இருந்தால் மாணவ மாணவிகள் 1098 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர் வினீத் தெரிவித்தார்.
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நாளில், கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர்:…
நடிகர் மாதவனின் புதிய செயலி நடிகர் மாதவன் பங்குதாரராக இருக்கும் ‘Parent Army (Parent Geenee)’ செயலி சென்னையில் உள்ள…
தனுஷ் இயக்கத்தில் உருவாகும் 4வது படம்தான் இட்லி கடை. ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள்…
உச்சகட்ட வைப்பில் அஜித் ரசிகர்கள் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் நேற்று இரவு வெளியாகி…
பெரிய திரையில் பிரபலமாக முதலில் கை கொடுப்பது சின்னத்திரைதான். சமீபகாலமாக இப்படி வந்தவர்கள் தான் இன்று சினிமாவை கோலோச்சி வருகின்றனர்.…
யுவன் ஷங்கர் ராஜா தான் காரணம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களை கவர்ந்து பின்பு தனக்கென்று ஒரு தனி…
This website uses cookies.