திருவள்ளூர் : 1,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சாமி திருக்கோவிலில் சித்திரைத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த ஆண்டார்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள அருணகிரிநாதரால் பாடல் பெற்ற சுமார் 1,500 ஆண்டுகள் பழைமைவாய்ந்த அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கடந்த 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக, முருகப்பெருமான் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டை, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வந்திருந்தனர். மேலும், பக்தர்கள் அலகு குத்தியும் மொட்டையடித்து தங்களுடைய நேர்த்திக் கடனை செலுத்தினர்.
முன்னதாக, முருகப்பெருமானுக்கு வள்ளி தெய்வயானையுடன் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. பின்னர், பாலசுப்பிரமணியர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தங்கமயில் வாகனத்தில் அமர்ந்தவாறு முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலசுப்பிரமணியரை தரிசனம் செய்தனர்.
அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலில் இருந்த கணவரை வெறுப்பேற்ற வீடியோ கால் பேசி மனைவி வெறுப்பேற்றிய நிலையில், கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…
டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது என மாநில நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர்…
ED சோதனையை சட்ட ரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்வோம் என மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.…
நடிகை சினோக தனக்கான தனியிடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.…
நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்…
ஓட்டப்பிடாரம் பகுதியில் மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தந்தையை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதையும் படியுங்க…
This website uses cookies.