திருவள்ளூர் : 1,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சாமி திருக்கோவிலில் சித்திரைத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த ஆண்டார்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள அருணகிரிநாதரால் பாடல் பெற்ற சுமார் 1,500 ஆண்டுகள் பழைமைவாய்ந்த அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கடந்த 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக, முருகப்பெருமான் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டை, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வந்திருந்தனர். மேலும், பக்தர்கள் அலகு குத்தியும் மொட்டையடித்து தங்களுடைய நேர்த்திக் கடனை செலுத்தினர்.
முன்னதாக, முருகப்பெருமானுக்கு வள்ளி தெய்வயானையுடன் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. பின்னர், பாலசுப்பிரமணியர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தங்கமயில் வாகனத்தில் அமர்ந்தவாறு முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலசுப்பிரமணியரை தரிசனம் செய்தனர்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.